View Full Version : Erode Eastern Cauvery UA - Discussions-II


senthilsindia
January 6th, 2012, 04:47 PM
Dear Forumers,,..Welcome to this new thread of Erode Eastern Cauvery Urban Agglomeration.... Here, We can discuss about Pallipalayam, Komarapalayam, Kokkarayanpet and Tiruchengode areas(since it is just 18kms from Erode Central), which lies on the Eastern banks of River Cauvery........

With this, we can split the discussions of Erode into two threads......

Erode Eastern Cauvery UA deals with Pallipalayam, Komarapalayam, Tiruchengode areas.
and Erode Western Cauvery UA deals with Core City, Bhavani, Perundurai areas

We can discuss about general projects and updates of the Geographic entity which can be brought under the Eastern Cauvery Agglomeration around Erode.

senthilsindia
January 6th, 2012, 05:54 PM
We are having the following threads on Erode
.....................................................

* Erode Western Cauvery UA - Discussions-I (http://www.skyscrapercity.com/showthread.php?t=971388) to discuss about Core City, Bhavani, Perundurai areas.

* Erode Eastern Cauvery UA - Discussions-II (http://www.skyscrapercity.com/showthread.php?t=1476829) to discuss about Pallipalayam, Komarapalayam and Tiruchengode areas

* Erode City Buses | Railways Updates (http://www.skyscrapercity.com/showthread.php?t=1440873) to discuss about Bus and Rail transport infrastructure in the City.

* Erode Ring Road | Other Road Infrastructure (http://www.skyscrapercity.com/showthread.php?t=1476832) to discuss about the Ring Road and other Road infrastructure Projects and Updates

* Erode Perundurai Road - Projects & Updates (http://www.skyscrapercity.com/showthread.php?t=1473582) to discuss about infrastructure, developments and project updates about the Perundurai Road

* Erode - Shopping | Entertainment | Hospitallity (http://www.skyscrapercity.com/showthread.php?t=1476848) to discuss about Retail, Shopping Complexes, Malls, Branded Showrooms, Malls, Multiplexes, Theaters, Fun Zones, Hotels and Hospitality

* Erode - SEZ | SIPCOT Industrial Complexes Megaprojects

* Erode in Memory and History

* Erode - Wishlists | Suggestions | Future Projects
........................................................

senthilsindia
January 6th, 2012, 06:11 PM
நாமக்கல்: "மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல்படி, ஆறு சட்டசபை தொகுதியில், 12 லட்சத்து 22 ஆயிரத்து 80 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். அதில், 65 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்தார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளுக்கான, புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை, (துணைப்பட்டியல் 4) கலெக்டர் குமரகுருபரன் வெளியிட்டார்.

திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில், 95 ஆயிரத்து 938 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 513 பெண் வாக்காளர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 462 பேரும், குமாரபாளையம் சட்டசபை தொகுதியில், ஒரு லட்சத்து 723 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 482 பெண் வாக்காளர் என மொத்தம் இரண்டு லட்சத்து 1,207 பேர் உள்ளனர்.


A Sum of 1,92,462 Voters in Tiruchengode constituency and 2,01,207 Voters in Komarapalayam Constituency.....

http://www.dinamalar.com/district_detail.asp?id=380202

senthilsindia
January 9th, 2012, 02:43 PM
http://i40.tinypic.com/ei6sl1.jpg

senthilsindia
January 9th, 2012, 03:25 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00887/09THSEARCH_887782f.jpg

Fishermen search for persons who got washed away in Cauvery River near Vendipalayam barrage in the Erode-Namakkal border on Sunday.

Nine persons from two families were on picnic at Odapalli, near Erode

Seven persons, including three women and a child, were feared drowned as water gushing from the sluice of the newly inaugurated 30-MW Bhavani Kattalai Barrage-II (BKB-II) built across the Cauvery river at Odapalli, connecting Pallipalayam and Erode, reportedly washed them away on Sunday. Only one body could be retrieved till the late hours of the day while the search for the rest continued.

Preliminary investigations revealed that the two families from Sasthri Nagar area in Erode had come there on a picnic. Deputy Superintendent of Police (DSP) of Tiruchengode sub-division A. Sujatha who was involved in the rescue operations told The Hindu that a total nine persons of the two families had come there that afternoon. “C. Debora (45) who had undergone a surgery and her relative Ryan (2) alone reportedly did not join the families and were seated on the banks of the River while others were sitting on a small heap of sand in the River and playing when they were washed away”, the DSP said.

According to Ms. Sujatha, the victims were playing in the water when the flow of water was stopped for about an hour as part of the Tamil Nadu Generation and Distribution Corporation's daily cleaning of the turbine. Fire and Rescue Services personnel from Tiruchengode who jumped into the rescue operations secured the body of Ryan's sister Candice Bosser (8) in the evening. The missing persons were identified as David Bosser (45), father of Ryan, his mother Gladia Bosser (40), Debora's husband Charles Smith (48) and his daughters Dona (21) and Nikki (19) and Dona's fiancé Gladston Paine (24).

Additional Superintendent of Police (Crime) G. Subbulakshmi said that dozens of fishermen along with local police and fire service personnel would continue rescue operations throughout the night – especially near Pallipalayam, Jaderpalayam and Nallur areas.

She said that fishermen volunteered in the search operations as they knew the course of the river better and were aware of pockets where bodies could have been pushed aside.

Namakkal Collector J. Kumaragurubaran, Erode Collector V.K. Shanmugam, Superintendent of Police (Namakkal) Pravesh Kumar and (Erode) S. Panerselvam and Revenue Division Officer (Tiruchengode) S. Kavitha were also present during the rescue operations.

Mr Kumaragurubaran told The Hindu that a request has been made to officials at the Mettur Dam to stop water released from the dam to quicken the rescue operations. Accordingly the flow of water that was 8,000 CFT till Sunday evening was reduced to 500 CFT around 6.30 p.m.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2786568.ece
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2787579.ece
http://www.ndtv.com/search?q=Vendipalayam+barrage
http://www.ndtv.com/article/tamil-nadu/two-more-bodies-recovered-from-cauvery-river-164982?pfrom=home-simplysouth

In Tamil
http://www.dailythanthi.com/article.asp?NewsID=700639&disdate=1/9/2012
http://www.dailythanthi.com/article.asp?NewsID=700753&disdate=1/9/2012&advt=2
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=381870
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=381873

madurakarenda
January 10th, 2012, 09:24 AM
* Erode Western Cauvery UA - Discussions-I (http://www.skyscrapercity.com/showthread.php?t=971388) to discuss about Core City, Bhavani, Perundurai areas.

* Erode Eastern Cauvery UA - Discussions-II (http://www.skyscrapercity.com/showthread.php?t=1476829) to discuss about Pallipalayam, Komarapalayam and Tiruchengode areas



Nice, but will be easy if the header of the thread's name has some info regarding the areas coming under it like within braces, because I have a very little knowledge on Erode and surrounding areas, and as an outsider I have a difficulty to get updates on Bhavani or Tiruchengode, which thread am I supposed to follow.

senthilsindia
January 10th, 2012, 05:00 PM
Nice, but will be easy if the header of the thread's name has some info regarding the areas coming under it like within braces, because I have a very little knowledge on Erode and surrounding areas, and as an outsider I have a difficulty to get updates on Bhavani or Tiruchengode, which thread am I supposed to follow.

Ya, i really agree with you........

But im having a lesser combinations with the title......

If you don mind, can you suggest me with some titles????

k, anyway i will modify it for easy identification.... But i think it will take atleast one month for title modification after creating a thread.......

senthilsindia
January 10th, 2012, 05:11 PM
“Come bak da” pleads Mechelle Payne in her wall post on the Facebook profile of her cousin Gladstone Payne, who was washed away in the Cauvery river along with six of his relatives at the Erode-Namakkal border on Sunday afternoon.

While this message was displayed prominently on the page around noon on Monday, his body was recovered towards evening by rescue personnel.

Throughout the day, the relatives and friends of those who were washed away alternated between hope and despair, nursing that wee bit of hope that at least one of the missing would return alive.

Gladstone (25), along with the families of David Bosser and Charles Smith, went to the newly-built barrage at Vendipalayam and was sitting on a heap of sand in the river, when water released from the barrage washed seven persons away, including him. The others were David Bosser (45), his wife Gladia Bosser (40), their daughter Candice Bosser (8), Charles Smith (48), his daughters Nikki (21) and Dona (19).

David's two-year-old son Ryan and Charles' wife Deborah Smith remained on the banks of the river while the others got into it. Candice's body was recovered on Sunday.

The bodies of Dona and David Bosser were found around noon on Monday.

The grief-stricken relatives and friends, who gathered at the Shasthri Nagar residence of the Smiths, kept hoping Gladstone, who is often referred to as Glady, will return. “We are still not able to believe that he is dead. We hoped that somehow Glady had managed to swim to safety and is alive,” a relative said.

“Come back hme [home] glady!!! We are waitng fr u!!!,” was a more recent comment posted by Ornella Curtis in Gladstone's page. In a little while from then, police confirmed he was dead.

“The younger ones wanted to spend some time leisurely as David Bosser and his family members, who came from Dubai for Christmas and New Year holidays, were scheduled to return on January 11. That's why they went to the river bank,” Douglas David, a close relative of the family, said.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2789130.ece
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2789061.ece

senthilsindia
January 10th, 2012, 05:13 PM
ஈரோடு: வெண்டிபாளையம் நீர்மின் நிலையத்தில் இருந்து, தண்ணீர் திறக்கும் போது எச்சரிக்கை விடுக்க அபாய சங்கு இல்லாததே, காவிரியில் குளித்த எட்டு பேர், நீரில் இழுத்து செல்லப்பட்டதற்கு காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில், ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில், கதவணை நீர் மின் நிலையம் இயங்கி வருகிறது. 18 மதகுகள் அமைக்கப்பட்டு, ஒன்பது மீட்டர் உயர நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் பாலமும், அதன் கீழ் மின்விசை அறையும், கட்டுப்பாட்டு அறையும் உள்ளன. கதவணை மூலம், 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மின் உற்பத்திக்காக தண்ணீரை வெளியேற்றியதால், ஆற்றில் குளித்த இரண்டு குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களின் உடல் தேடும் பணி நடக்கிறது.

கவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் முன், அபாய சங்கு ஒலித்திருந்தால், உயிரிழப்பு சம்பவம் நேர்ந்திருக்காது என, பரிசல் ஓட்டும் மீனவர்கள் புகார் கூறினர். அவர்களது பேட்டி: ஓடப்பள்ளி முருகேசன் (38): தண்ணீரில் அடித்து சென்றவர்கள் தப்பிக்க, சைகை மூலம் அவர்களுக்கு வழிகாட்டினேன். ஆனால், நான் இக்கரையில் நின்றபடி சைகை செய்தது அவர்களுக்கு தெரியவில்லை. கதவணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது அபாய சங்கு கட்டாயம் ஒலிக்க வேண்டும்.

பள்ளிபாளையம் சவுந்திரராஜன்(38): பரிசல் ஓட்டும் பணியை, 20 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதுவரை இதுபோன்று சம்பவத்தில் சிக்கியவர்களை அதிகம் மீட்டுள்ளோம். கதவணையில் இருந்து திடீரென தண்ணீர் திறக்கின்றனர். ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லவே பயமாக உள்ளது.
கொக்கரையான்பேட்டை ரவி(35): மீன்பிடிக்கும் தொழிலை, 17 ஆண்டுகளாக செய்து வருகிறேன். மேட்டூரில் இருந்து வெண்டிபாளையம் வரையுள்ள அணைத்து கதவணையிலும் இதே நிலைமைதான் உள்ளது. முன்னறிவிப்பின்றி திடீரென தண்ணீர் திறக்கின்றனர். இதனால், பரிசல், துடுப்பு, வலை உள்ளிட்ட பொருட்களை இழந்த மீனவர்கள் ஏராளம்.
பள்ளிபாளையம் மெய்வேல் (44): ஆண்டின், 365 நாளும், எங்களுக்கு மீன்பிடி தொழில்தான். 25 ஆண்டுகளாக இத்தொழில் செய்து வருகிறேன். கதவணையில் இருந்து முறையாக, அபாய சங்கு ஒலித்து தண்ணீர் திறப்பதில்லை. இதனால், ஆற்றில் குளிக்க வருவோர், இதுபோன்று பேராபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கதவணை அருகிலேயே நடந்த சம்பவத்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பள்ளிபாளையம் கோபி(35): நான் கதவணை பகுதியில் நேற்று முன்தினம் காலை குளிக்க வந்தேன். கதவணை அருகே தண்ணீர் வெளியேறுமிடத்தில் இரும்பு குழாய் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். தண்ணீர் திடீர் திறப்பால் அனைவரும் அடித்து செல்லப்பட்டனர். அப்போது தண்ணீரில் தத்தளித்த ரெயின்பாசுவை நான்தான் காப்பாற்றி, கரை சேர்த்தேன். பல கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டுகின்றனர். ஆனால், அபாய சங்கு வைக்க அரசு முன்வர வேண்டும்.
பள்ளிபாளையம் ராஜா: பத்தாண்டுக்கு மேலாக பரிசல் ஓட்டி வருகிறேன். கதவணையில் "அலாரம்' பொருத்தியிருந்தால், இந்த சம்பவம் நிச்சயம் நடந்திருக்காது. ஏன் இதை அதிகாரிகள் செய்ய மறுக்கின்றனர்? என புரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=382808
http://www.dinamalar.com/district_detail.asp?id=382840
http://www.dinamalar.com/district_detail.asp?id=382837

chennaidesi
January 10th, 2012, 07:29 PM
So sad.
I dont understand why govt enforce life jackets for boat trips in tourist places.
During 2007 terriorist attacks I understand Mumbai police just had 50 bullet proof vests. It is really shocking why in India people dont care for such simple things which can save lives.

senthilsindia
January 11th, 2012, 05:13 PM
ஈரோடு: வெண்டிபாளையம் பேரேஜில் மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கி வைக்கும் போது காவிரி கரை பகுதியில் உள் ள 450 வீடுகள் தண்ணீரில் மூழ்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு அருகே வெண்டிபாளையத்தில் ரூ. 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேரேஜ் கட்டப்பட்டு 18 கதவணைகளுடன் 30 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதற்காக காவிரி ஆற்றில் பேரேஜ் பகுதியில் தண்ணீர் தேக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தண்ணீர் தேக்கி வை க்கும் போது கரையோரங்களில் உள்ள வீடு களில் தண்ணீர் புகுந்து விடுகின்றது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கரு ங்கல்பாளையத்தில் இருந்து வெண்டிபாளையம் வரையிலும் நாமக்கல் மாவ ட்டத்தில் பள்ளிபாளையத்தில் இருந்து சோ ளசிராமணி வ¬ ரயிலும் காவிரி ஆற்றில் இரு கரையோரத்தில் தண்ணீர் புகுந்துவிடும் நிலையில் உள்ள 450 வீடுகளை காலி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் மட்டும் காலி செய்துவிட்டு மாற்று இடங்களுக்கு சென்றுவிட்டனர். தண்ணீரில் மூழ்க வாய்ப்பு உள்ளது என்று மின்வாரியத்தால் அடையாளம் காணப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் காலி செய்யாமல் இருந்து வருகின்றனர். மாற்று இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் கூட வீடுகளை காலி செய்யாமல் உள்ளனர்.
இதனால் பேரேஜ்ஜில் முழுமையான அளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெண்டிபாளையம் பேரேஜ்ஜில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திடீரென்று திறந்துவிடப்பட்டதால் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 9 பேர் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் வெண்டிபாளையம் பேரேஜ்ஜில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரினால் கரையோரத்தில் உள்ள வீடுகள் எளிதில் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது.
எனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள வீடுக ளை காலி செய்ய மின்வாரியம் மற்றும் வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதோடு வீடுகளை காலி செய்யும் மக்களுக்கு மாற்று இடங் களை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

More than 450 houses which were identified among safetyless are still occupied with people....

Eventhough it is intimated by the authorities to vacate the houses, people are not moving away, which poses high security risk.....

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=33976

senthilsindia
January 11th, 2012, 05:15 PM
பள்ளிபாளையம்: ஏழு பேரை பலி கொண்ட ஓடப்பள்ளி கதவணையில் தண்ணீர் திறப்பை அறிவிக்க நேற்று அலாரம் பொருத்தப்பட்டது.
பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கதவணையில் கடந்த 8ம் தேதி திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒன்பது பேர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஏழு பேர் பரிதாபமாக இறந்தனர். கதவணையில் 8 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் திடீரென மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் வழித்தடத்தில் தண்ணீர் வேகத்தோடு வெளியேறி அங்கிருந்தவர்களை அடித்து சென்று விட்டது.
அணையில் தண்ணீர் திறந்து விடப்படும் போது எச்சரிக்கும் விதமாக சைரன் வைத்திருந்தால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே, மின் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால்தான் ஏழு பேர் பரிதாபமாக இறந்து போயினர். இதனால் பலரும் அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய சென்னையில் உள்ள உயரதிகாரிகள் இரண்டு நாட்களில் சைரன் மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று உடனடியாக அணையில் சைரன் பொருத்தப்பட்டு சோதனையோட்டம் நடத்தப்பட்டது. இனி தண்ணீர் திறக்கப்படும் முன்னர் சைரனை ஒலிக்கச் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போலவே கதவணையின் நீர் வெளியேறும் முன்பகுதியில் இருளிலும் ஒளிரும் வகையில் அறிவிப்பு பலகையும் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று அறிவிப்பு பலகை வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=33822

senthilsindia
January 11th, 2012, 05:17 PM
ஈரோடு: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் தலைவர் மற்றும் மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் முருகேசன் துவக்கி வைக்கிறார்.
குமாரபாளையம் எக்ஸல் கல்வி குழுமத்தின் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியுடன் விமான கண்காட்சி எக்ஸல் கல்லூரி வளாகத்தில் வரும் 12,13 தேதிகளில் நடைபெற உள்ளது.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் டாக்டர் நடேசன் தலைமை வகிக்கிறார். எக்ஸல் கல்வி நிறுவனங்களில் நிர்வாக அறங்காவலர் பார்வதி விழாவை துவக்கி வைக்கிறார்.
கண்காட்சிக்கு 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் 75க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சமர்பிக்கின்றனர்.
பொறியியல் பாலிடெக்னிக் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகிறது. கண்காட்சியில் தங்கள் படைப்புகளை சமர்பிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
பொறியியல் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்களுடன் இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் பள்ளி மாணவர்களின் புதிய கருவிகளின் செயல்பாடுகள்.
பல போரில் பங்கு பெற்ற சாதனை புரிந்த விமான படையின் மிக்-23 வகை போர் விமானத்தையும் ரஷ்ய விமான இன்ஜின் இயங்கும் விதத்தினையும் நேரில் காணும் வாய்ப்பு.
அமெரிக்கா செஸ்ஸனா விமானத்தில் உள்ளே அமர்ந்து காணும் வாய்ப்பு.
விமான பைலட்களுக்கான பயிற்சி சாதனங்களை பார்வையிட வாய்ப்பு.
சிறிய விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள்.
ரிமோட் இயக்கத்தில் குட்டி ஹெலிகாப்டர் விமானங்களின் விண் சாகசங்கள். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயல் விளக்கங்கள். கம்ப்யூட்டர் மற்றம் எலக்ட்ரானிக்ஸ் துறையின் பல்வேறு உயரிய தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள்.
நவீன தகவல் பரிமாற்ற சாதனங்கள் மற்றும் செயல் விளக்கம்.குயிஸ்ட் குளோபல் இன்ஜினியரிங் பி லிட் பெங்களூர் நிறுவனத்தின் சுந்தரராஜன் கலந்து கொண்டு விமான கண்காட்சியினை துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல் டெக்னாலஜி லிட் சென்னையின் மனித வள மேம்பாட்டு மேலாளர் டாக்டர் ரஜினி ஸ்ரீராம் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்க வைக்கிறார்.
முதன் விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழக தலைவர் மற்றுமு மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் முருகேசன் கலந்து கொண்டு பேசுகிறார். எக்ஸல் எக்ஸ்பிரஸ்-2012 என்ற விழா மலர் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர்.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் டாக்டர் மதன் கார்த்திக் வரவேற்கிறார். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் பங்கேற்கிறார்.
டாக்கீஸ் சுப்பிரமணியம் நன்றி கூறுகிறார். கண்காட்சிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு இலவசமாகும்.

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=33958

senthilsindia
January 11th, 2012, 05:18 PM
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சேலம் மற்றும் ஈரோடு மண்டல அளவிலான தடகள விளையாட்டு போட்டி நேற்று துவங்கின.
இரு மண்டலங்களையும் சேர்ந்த 25 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தடகளப்போட்டியில் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் குழந்தைவேலு அனைவரையும் வரவேற்றார். தாளாளர் ரங்கசாமி ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக்கொண்டார்.
விழாவில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை யை கல்லூரிகளின் செயலாளர் சீனிவாசன் ஏற்றுக் கொண்டார். 100 மீ, 400 மீ, 800 மீ ஓட்டப்பந்தயம் மும்முறை தாவுதல், தடை ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவில் கே.எஸ்.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் வெங்கடேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மகுடேஸ்வரன் நன்றி கூறினார்.
ராசிபுரம் தாசில்தார் பொறுப்பேற்பு
ராசிபுரம்: ராசிபுரம் தாசில்தாராக பணியாற்றி வந்த சத்தியநாராயணன் முத்திரைதாள் தனி வட்டாட்சியராக பணிமாறுதல் பெற்று சென்றதையடுத்து, புதிய தாசில்தாராக செல்வகுமார் பொறுப்பேற்றுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை நில சீர்திருத்த ஆணையர் அலுவ லக கண்காணிப்பாளராகவும், ஈரோடு, ராசிபுரம் பகுதிகளில் துணை வட்டாட்சியராகவும் பதவி வகித்துள்ளார்.

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=33805

thillai_selvan
January 12th, 2012, 04:37 AM
^^ Dear Friend,
You are making the thread active that is good. But whether the above post is suitable for this???? :ohno:

rsubbu.mdu
January 12th, 2012, 05:07 AM
^^ Dear Friend,
You are making the thread active that is good. But whether the above post is suitable for this???? :ohno:

+100

MA Eswaran
January 12th, 2012, 01:22 PM
பள்ளிபாளையம்: ஏழு பேரை பலி கொண்ட ஓடப்பள்ளி கதவணையில் தண்ணீர் திறப்பை அறிவிக்க நேற்று அலாரம் பொருத்தப்பட்டது.
பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கதவணையில் கடந்த 8ம் தேதி திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒன்பது பேர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஏழு பேர் பரிதாபமாக இறந்தனர். கதவணையில் 8 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் திடீரென மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் வழித்தடத்தில் தண்ணீர் வேகத்தோடு வெளியேறி அங்கிருந்தவர்களை அடித்து சென்று விட்டது.
அணையில் தண்ணீர் திறந்து விடப்படும் போது எச்சரிக்கும் விதமாக சைரன் வைத்திருந்தால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே, மின் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால்தான் ஏழு பேர் பரிதாபமாக இறந்து போயினர். இதனால் பலரும் அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய சென்னையில் உள்ள உயரதிகாரிகள் இரண்டு நாட்களில் சைரன் மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று உடனடியாக அணையில் சைரன் பொருத்தப்பட்டு சோதனையோட்டம் நடத்தப்பட்டது. இனி தண்ணீர் திறக்கப்படும் முன்னர் சைரனை ஒலிக்கச் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போலவே கதவணையின் நீர் வெளியேறும் முன்பகுதியில் இருளிலும் ஒளிரும் வகையில் அறிவிப்பு பலகையும் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று அறிவிப்பு பலகை வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=33822

After some tragedy happened only, authorities will realise the measures. Is it not the common sense, alarm is to be installed and given whenever they raise the shutters?

senthilsindia
January 13th, 2012, 03:34 PM
Six dyeing units were demolished on Thursday in a drive that was jointly conducted by officials from the Tamil Nadu Pollution Control Board (TNPCB), revenue department, and the police in and around Komarapalayam – near the National Highway – in Tiruchengode taluk.

District Environmental Engineer K. Gokuladas told The Hindu that 15 winches, six generator sets and eight cement tanks were removed during the drive that was conducted from 9.30 a.m. to 2 p.m. “Effluents from these units were directly drained into streams and rain water drains that took the water to River Cauvery,” he added.

“Some of these units were identified by department persons while the rest were identified based on complaints received from the public and environment activists,” he said. These units came up in the last three months.

Majority of the units were assembled from old machinery as the owners did not want to invest heavily in new units. Mr. Gokuladas said that a total 208 polluting units in the district have been sealed during a series of drives conducted from March 2011.

He expressed his concern over the trend of renting out vacant land and agriculture fields to such units.

Revenue Division Officer (Tiruchengode) S. Kavitha, Deputy Superintendent of Police (Tiruchengode) A. Sujatha were among those involved in the raids.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2797593.ece


குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில், அனுமதியின்றி செயல்பட்டு வந்த, 14 சாயப்பட்டறைகளை, வருவாய்த்துறையினர் அகற்றினர்.
குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியான பெருமாபாளையம், பைபாஸ் சாலை ஆகிய இடங்களில், அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்கேடு அடையச் செய்து வந்தது. அதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோகுல்தாஸ் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவிதா உள்ளிட்ட வருவாய்துறையினர், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி செயல்பட்ட, 14 சாயப்பட்டறைகளை அகற்றினர். தொடர்ந்து, அனுமதியின்றி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=385023

Since the rules became very tough in Erode district in closing of Dyeing units around Erode, they have just moved to the places across Cauvery. (which are in Namakkal district).... Now this too getting arrested.....

A Good move...

But instead of demolishing all of these factories, the Govt. can make an Integrated Complex like SIPCOT especially for Dyeing, Tanning and Bleeching Units and build a common effluent treatement plant over there. Orelse they can implement the long-pending sceme of taking this waste to sea by pipeline......

senthilsindia
January 19th, 2012, 04:43 PM
ஜேடர்பாளையம் அணைக்கட்டில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவில், சமூக விரோதிகள் புகுந்து அங்குள்ள சிமெண்ட் பெஞ்ச், விலங்குகள் பொம்மைகளை உடைத்து நாசமாக்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஒகேனக்கல்லுக்கு அடுத்து மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே, 124 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணை மற்றும் பூங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காவிரிக்கரையோகம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், ப.வேலூர், மோகனூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே இந்து வந்தது.

இந்நிலையில், ப.வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலாத்தலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முன்பு நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயம் தனது நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய், எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் தனது மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் என மொத்தம், 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர்.
அதை தொடர்ந்து கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி துவங்கியது. அதில், சுற்றுலாப்பயணிகள் அமரும் வகையில் சிமெண்ட் இருக்கை, மான், முயல், ஒட்டகச்சிவிங்கி போன்ற ஆளுயர சிமெண்ட் சிலைகள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டது.
மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாடக்கூடிய சீசா போன்றவையும் பூங்காவில் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
சமூக விரோதிகள் சிலர் பூங்காவுக்கு சென்று "போதை' ஏற்றிக்கொண்டு அங்குள்ள சிமெண்ட் பெஞ்ச், ராட்டினம், சிமெண்ட் சிலைகளை உடைந்து நாசமாக்கி உள்ளனர். மேலும், பூங்கா முறையாக பராமரிப்பு இல்லாததால், சுற்றுலாப்பயணிகள் முகம் சுளித்து செல்லும் நிலை உள்ளது. சமூக விரோதிகளை கட்டுப்படுத்தவும், பூங்காவை முறையாக பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=388531

senthilsindia
January 19th, 2012, 04:44 PM
பள்ளிபாளையம் : "காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வசதியாக, படித்துறை அமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி காவிரி ஆற்றில் தடுப்பணை அமைத்து மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக, அவ்வப்போது தண்ணீர் தேக்கி வைத்து, மீண்டும் திறந்து விடுப்படுகிறது. அதேபோல், கடந்த 8ம் தண்ணீர் தேக்கி சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஈரோட்டை சேர்ந்த சார்லஸ் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் என 8 பேர் ஆற்றுக்கு நடுவே சென்று குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.
அதை தொடர்ந்து காவிரி ஆற்றின் நடுவே சென்று குளிக்கச் செல்வதற்கு பயந்து கொண்டு மக்கள் கரையில் குளித்து வருகின்றனர். பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கி வைக்கும் போது, அப்பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தண்ணீர் எப்போதும் தேங்கி இருப்பதால், கரையோரப்பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அங்கு இறங்கி குளித்தால், சகதியில் சிக்கும் அபாயம் உள்ளதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஆற்றின் கரையோரம், ஆங்காங்கே குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் படித்துறை அமைத்தால், அங்கு வருபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
"மக்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வசதியாக படித்துறை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=388527

senthilsindia
January 19th, 2012, 05:04 PM
பள்ளிபாளையம் : "காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வசதியாக, படித்துறை அமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி காவிரி ஆற்றில் தடுப்பணை அமைத்து மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக, அவ்வப்போது தண்ணீர் தேக்கி வைத்து, மீண்டும் திறந்து விடுப்படுகிறது. அதேபோல், கடந்த 8ம் தண்ணீர் தேக்கி சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஈரோட்டை சேர்ந்த சார்லஸ் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் என 8 பேர் ஆற்றுக்கு நடுவே சென்று குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.
அதை தொடர்ந்து காவிரி ஆற்றின் நடுவே சென்று குளிக்கச் செல்வதற்கு பயந்து கொண்டு மக்கள் கரையில் குளித்து வருகின்றனர். பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மின் உற்பத்திக்காக தண்ணீர் தேக்கி வைக்கும் போது, அப்பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தண்ணீர் எப்போதும் தேங்கி இருப்பதால், கரையோரப்பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அங்கு இறங்கி குளித்தால், சகதியில் சிக்கும் அபாயம் உள்ளதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஆற்றின் கரையோரம், ஆங்காங்கே குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் படித்துறை அமைத்தால், அங்கு வருபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
"மக்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் வசதியாக படித்துறை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=388527

They can develop parks on both sides (Vendipalayam & Odapalli) and promote tourism by providing things like shore walk-ways, boating, river-view restaurants, open-air amphitheatres, etc,.......

senthilsindia
January 22nd, 2012, 01:54 PM
பள்ளிபாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி காவிரி ஆற்றில் கட்டுப்பட்டுள்ள தடுப்பணையை கண்டு ரசிப்பதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் வகையில், தடுப்பணையை ஒட்டி சுற்றுலாத்தலம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதற்காக, 40 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதை தொடர்ந்து, சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். தாசில்தார் செல்லமுத்து வரவேற்றார். நகராட்சி சேர்மன் வெள்ளியங்கிரி, யூனியன் சேர்மன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுரங்கம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, சுற்றுலாத்தலத்துக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சுந்தரம், நகராட்சி துணைத்தலைவர் சுப்ரமணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=390639

senthilsindia
January 23rd, 2012, 03:24 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00900/23THBARRAGE_900528f.jpg

The site where the park will come up close to the barrage and Cauvery (seen behind), at Odapalli, near Pallipalayam in Erode.

Foundation stone laid for park near Bhavani Kattalai Barrage-II, near Erode

Just two weeks after seven members of two families were washed away in the river Cauvery near the barrage at Odapalli near Pallipalayam in Namakkal district, the spot was in focus again.

A picnic spot is to be developed barely 200 feet from where these people were swept to a watery grave. Realising that people were drawn to this scenic location along the river, the district (Namakkal and not Erode??!!!!:bash::bash:) authorities have decided to create a recreation facility, but with adequate safeguards that will prevent the recurrence of the January 8 tragedy.

“While these accidents occurred downstream [of the barrage], a park is to be established upstream where there is no chance for sudden or drastic increase in the water level,” says R. Selvaraj, Executive Engineer of the Public Works Department – Water Resources Organisation, Sarabanga Basin Division – Namakkal.

By June this year, tourists and people from Namakkal and Erode districts can enjoy the beauty of the river and the expansive Bhavani Kattalai Barrage-II (BKB-II).

The park will be established on 1.34 acres at Rs.60 lakh on a public-private partnership. The foundation for the park was laid by Industries Minister P. Thangamani on Saturday. He said that it had a public contribution of Rs.13 lakh and government contribution of Rs.26 lakh while the rest would be funded by the PWD. The park will have a lawn, play equipment for children, fountains and footpath.

“Safety measures are given prime importance and for this purpose the banks of the river will be raised to a safe height from the course of the river, after which a fence will be erected at a safe distance from the river,” Mr. Selvaraj says.

Other safety measures have also been taken downstream with nearly 10 warning signs put up on either side of the river and sirens installed atop the barrage to caution people on the risks, especially during the release of water.

“There will be water for a stretch of more than 500 ft along the banks and for the entire width of the barrage that runs for more than 980 ft to serve as a visual treat to the visitors throughout the year. That is why this site was chosen for the recreation facility,” he adds.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2823542.ece

senthilsindia
January 26th, 2012, 04:41 PM
புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிக்கு, நிலங்களை கையகப்படுத்த ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் இணைக்கும் பாலமாக சாலை கட்டமைப்பு உள்ளது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையின் காரணமாக, சாலைகள் விரைவிலேயே பழுதடைவதை களையும் விதத்திலும், மேலும் நகரங்களின் போக்குவரத்தினை சீரமைக்கும் விதத்திலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், நேர்வழிப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் வண்ணமும், ரூ.152 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரம் செலவில், தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர், பவானி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆற்காடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/2012_new/News_Detail.asp?Nid=703

MA Eswaran
January 27th, 2012, 01:33 PM
Any idea the route of the bye pass for Tiruchengode?

senthilsindia
January 27th, 2012, 03:42 PM
Any idea the route of the bye pass for Tiruchengode?

I hope it will be implemented in the alignment connecting the roads in the order: Salem Road-Rasipuram Road-Namakkal Road-Paramathi Road-Kokkarayanpet Road(Section of Erode's Ring Road)-SPB Colony Road.......

Might be possibly in the south of T.Gode Hill.......

MA Eswaran
January 30th, 2012, 06:42 AM
Is there any news regarding widening of Erode-T.gode road as the traffic has reached its peak?

senthilsindia
January 30th, 2012, 04:55 PM
Is there any news regarding widening of Erode-T.gode road as the traffic has reached its peak?

No progress MAE.....

Since the widening of 16kms Erode-Perundurai Road into four lane, people of this area were highly expecting the widening of this 16kms Erode-T.Gode Road...

Likewise how Perundurai Road caters to the heavy traffic towards Tirupur, Coimbatore, Pollachi, Kerala..; this T.Gode road caters to the heavy traffic towards Namakkal, Rasipuram, Attur, Kallakurichi, Perambalur, Ariyalur, Trichy.,....

People are calling it as the Ghost Road, since a lot many private bus players are there in this route running with much higher speeds....

So, Govt. should focus on the widening of it, along with the construction of parallel Cauvery Bridge.....

senthilsindia
January 30th, 2012, 05:07 PM
குமாரபாளையம்-பள்ளிபாளையம் சாலையில், ராயல் மோட்டார்ஸ் டூவீலர் ÷ஷாரூம் துவக்க விழா, கோலாகலமாக நடந்தது.நிறுவன உரிமையாளர் முரளிதரன் தலைமை வகித்தார். பவானி சிவனடியார் திருக்கூட்டத்தினர் பங்கேற்று, சிறப்பு யாக பூஜைகள் செய்தனர். இங்கு, சுஷூகி நிறுவனத்தின் டூவீலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் புதிய மாடல்களான, சிலிங்சூட் ப்ளஸ், நியு ஜி.எஸ்.150 ஆர்., ஆக்ஸீஸ் 125 ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள், குறைந்த விலையில் தரமானதாகவும், அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=395855

senthilsindia
January 31st, 2012, 02:48 PM
குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள விசைத்தறித் தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், ஜவுளி உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளது.
குமாரபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில், ஆயிரக்கணக்கான விசைத் தறிப்பட்டறகைள் இயங்கி வருகின்றன. அதில் பணிபுரியும் தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்களை அமைத்து, தங்களது கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்துவது வழக்கம்.
அதன்படி, ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், நேற்று, 100 சதவீத கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அச்சங்க மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் தலைமையிலானோர், வேலை நிறுத்த போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி, நகரின் முக்கிய பகுதியில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் உள்ள தறிப்பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனால், நகரில் ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறி பட்டறைகள், தொழிலாளர்கள் இல்லாததால் செயல்படவில்லை.
தற்போதுள்ள கூலித் தொகையில் இருந்து, 100 சதவீதம் கூலியை உயர்த்தி தரும் வரை, போராட்டம் தொடரும் என, அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவித்து, மற்ற சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இப்போராட்டத்தால், ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=396483

senthilsindia
January 31st, 2012, 02:50 PM
பள்ளிபாளையம்: ""தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மூன்று டேங்க் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்,'' என, கவுன்சில் கூட்டத்தில், பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் கூறினார். பள்ளிபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம், அதன் கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி சேர்மன் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். கமிஷனர் முத்துவெங்கடேஷ், துணைத்தலைவர் சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: அமிர்தலிங்கம் (சுயேட்சை): நகராட்சியில், தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேலும், மளிகைக் கடைகளில் கலப்பட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளியங்கிரி (சேர்மன்): தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, கூடுதல் நேரம் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். மேலும், நகராட்சி பகுதியில் கூடுதலாக மூன்று மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, நகராட்சி முழுவதும் தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம், விரைவில் துவங்கப்படும். அதன் மூலம் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். சுகாதார ஆய்வாளர் மூலம் கலப்பட பொருள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலமுருகன் (தி.மு.க.,): நகராட்சியின் பல்வேறு இடங்களில், கழிப்பறை வசதி இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களின் சிரமத்தை கருதி கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.
சுப்ரமணி (து.தலைவர்): நகரில், கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லை. இருந்தும், சந்தைப்பேட்டை அல்லது ஆற்றங்கரை ஓரத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படும்.
ரவி (தி.மு.க.,): காவிரி ஆற்றில், ஆகாயத்தாமரை அதிக அளவில் உள்ளதால், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலமுருகன் (தி.மு.க.,): அக்ரஹாரத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு பகுதியில், சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், அவ்வழியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.
சேர்மன்: குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு கட்டிடத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து, "கேட்' அமைக்கப்படும். சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=396478

senthilsindia
February 2nd, 2012, 03:20 PM
பள்ளிபாளையம் : வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், பயனாளிகளுக்கு வழங்காமல் வீடுகள் பூட்டியே கிடக்கிறது.
பள்ளிபாளையம் அடுத்த அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புகள் விரிசல் ஏற்பட்டு, பழுதடைந்து காணப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் வீட்டு வசதி வாரியத்தின் மூலம், 2007ம் ஆண்டு குடியிருப்பில் வசித்த குடும்பங்களுக்கு, 8,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும் வீடுகள் ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், பலரும் வீடுகளை காலி செய்தனர்.
தொடர்ந்து, பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. புதிய குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் உரியவர்களுக்கு ஒப்படைக்கவில்லை.
இங்கு சாலை வசதி, மின் வசதி மற்றும் சாக்கடை வசதி மட்டுமே பாக்கி உள்ளது. இதுவரை குடியிருப்புகளை ஒப்படைக்காமல் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, குடியிருப்பை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பொன்னுசாமி கூறியதாவது:
சேலம் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டாகியும் இன்னும் பயனாளிகளுக்கு ஒப்படைக்காமல் உள்ளனர். இங்கு சாலை, சாக்கடை மற்றும் மின் வசதி ஏற்படுத்துவது மட்டுமே பாக்கி உள்ளது. இப்பணிகளை அதிகபட்சம், இரண்டு மாதத்தில் முடித்துவிடலாம். இது குறித்து சேலம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளரிடம் நேரில் சென்று கேட்டபோது, டெண்டர் விடப்பட்டுள்ளது, வேலைக்கான அனுமதியை சென்னை அதிகாரிகள்தான் முடிவு செய்வர் என, தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எஞ்சியுள்ள வேலைகளை விரைந்து முடித்து, வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=397861

senthilsindia
February 10th, 2012, 03:21 PM
பள்ளிபாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணையில் தண்ணீர் தேக்குவதால், ரயில்வே மேம்பாலம் கீழ் வரை தண்ணீர் தேங்கி, விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தடுப்பணையில் தண்ணீர் தேங்குவதன் மூலம், அருகே உள்ள ரயில்வே பாலம் கீழ் வரை தண்ணீர் வருகிறது. அந்த வழியாக, எஸ்.பி.பி., காலனி மற்றும் ஆர்.எஸ். ரோடு செல்ல வேண்டும்.
இந்நிலையில், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது விபத்து அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தடுப்பணையில் தண்ணீர் தேக்குவதன் மூலம் சாலைக்கு தண்ணீர் வருகிறது. அதனால், வாகனங்கள் தண்ணீரினுள் இறங்கி, சிறிது தூரம் பயணித்து பின் வெளியேற வேண்டும். தவிர, தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் வாகனங்கள் வளைந்து செல்கிறது. கவனக்குறைவாக நேராக சென்றால் வாகனங்கள் காவிரி ஆற்றில் இறங்கி விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவி வருகிறது. இதை தவிர்க்க, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

senthilsindia
February 15th, 2012, 03:21 PM
ஈரோடு பள்ளிபாளையம்: அனுமதி பெறாத சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்படுகிறது. அதனால், காவிரி ஆற்றில் உள்ள மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள், கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு, பவானி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகள் ஈரோடு மாநகராட்சியின் புறநகர் பகுதிகளாக விரிவடைந்துள்ளன.

ஈரோடு மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தது. அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்பட்டது. அதனால், காவிரி நீரின் தன்மை பாதிக்கப்பட்டு, அவை விஷமாக மாறி, நீர்வாழ் உயிரினங்கள் செத்து மடியும் அபாயம் உருவாகியது.

தவிர, காவிரிக் குடிநீரை பயன்படுத்துவோரும் பல்வேறு சரும நோய் பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த, நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள், இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மேலும், அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் தொடர்ந்து செயல்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், தற்போது, பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் மீண்டும் அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் முளைத்துள்ளன. அவற்றில் இருந்து, பழையபடி சாயக்கழிவு நீர் காவிரியில் கலந்து விடப்படுகிறது.

தவிர, பவானி, அசோகபுரம், ஆர்.என். புதூர் ஆகிய பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் காவிரி ஆற்றில் நேரடியாக கலந்து விடப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
சாயக்கழிவு நீர் மற்றும் தோல் கழிவு நீரும் ஆற்றில் கலப்பதால், நீரின் தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிறம் மாறியும், துர்நாற்றம வீசியும் வருவதாக, அங்குள்ளோர் புகார் தெரிவிக்கின்றனர். தவிர, மீன்களும் ஆற்றில் செத்து மிதக்கிறது. அதனால், காவிரிக் கரையோரத்தில் துர்நாற்றம் அதிகளவில் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து காவிரிக் கரையோரத்தை சேர்ந்த மக்கள் கூறியதாவது:

பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. அதை சார்ந்து சாயப்பட்டறைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முறையான அனுமதி பெறாத சாயப்பட்டறைகளாகும். திருப்பூரில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டதையடுத்து, அவை, பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரிக் கரையை ஓட்டி ஆரம்பிக்கப்பட்டது.
சாயப் பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கழிவு நீர் வெளியேற்ற வேண்டும். ஆனால், அனுமதி பெறாத சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. அவை, நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது.
அதேபோல், தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், நேரடியாக ஆற்றில் கலந்து விடப்படுகிறது. ஆற்றில் மின்கள் செத்து மடிகின்றன.

பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி முதல் ஓடப்பள்ளி வரை ஐந்து கி.மீ., தூரத்துக்கு மீன்கள் செத்து மடிந்துள்ளது. ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களில் இருந்து எழும் துர்நாற்றம், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
இப்பிரச்னையை அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், ஜீவதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் கழிவு நீரை கலப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

senthilsindia
February 15th, 2012, 03:23 PM
நாமக்கல்: "அரசு உத்தரவு பிறப்பித்தவுடன், நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை, குமாரபாளையம் என இரு தாலுகாக்கள் அமைக்கப்படும்' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் தாலுகாவில் உள்ள ஏழு கிராமம், ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஒன்பது கிராமங்கள் சேர்த்து, கொல்லிமலை தனி தாலுகாவாக அமைக்க, கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிக்கை அனுப்பப்பட்டது. அரசு கேட்ட கூடுதல் விவரங்களும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, கொல்லிமலை தனித் தாலுகாவாக பிரிப்பது, அரசின் பரிசீலனையில் உள்ளது.

அதுபோல், திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகியவற்றுடன், மேலும் மூன்று கிராமங்களையும் சேர்த்து மொத்தம், 20 கிராமங்களைக் கொண்டு குமாரபாளையம் தனித் தாலுகாவாக அமைக்க, கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதுகுறித்த கூடுதல் விவரங்களும், 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை, தனி தாலுகாவாக அமைப்பது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது. எனவே, அரசு உத்தரவு பிறப்பித்தவுடன், நாமக்கல் மாவட்டத்தில் இரு புதிய தாலுகாக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.:banana::lol:

http://www.dinamalar.com/district_detail.asp?id=405868

senthilsindia
February 10th, 2013, 02:19 PM
Along the new Barrage @ Odapalli, the Nmkl Dist admin has constructed a Park...

But it invites visits only@weekends...

Also, they have closed the Railway Under Bridge@SPB Paper mill just in the bank of Cauvery due to Water storage in Barrage...

The Route-1 City Buses takes this route now...

SPBColony-TajNagar-SPBMills-TajNagar-TeachersColony-Pallipalayam-Karungalpalayam-Thirunagar-Central-PSPark-Junction-GH...

It does not touches CauveryRS

senthilsindia
March 6th, 2013, 03:23 PM
Good News!

They are going to construct a new ROB @ Cauvery RS...

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ரயில்வே பாதையில், மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, ரயில்வே துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மூன்று மாதத்தில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளி காவிரி ஆற்றில், மின் உற்பத்திக்காக தடுப்பணை கட்டப்பட்டது. இங்கு மின் உற்பத்திக்காக, ஒன்பது மீட்டர் உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், பள்ளிபாளையம் காவிரி பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும்.அப்போது, அவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். அந்நிலையில், சுற்று வட்டார பகுதியான காவேரி, வசந்த நகர், புதுப்பாளையம், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, பாப்பம்பாளையம், அம்மாசிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பல கி.மீ., தூரம் சுற்றிக்கொண்டு பள்ளிபாளையம் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அதனால், அலைச்சல் ஏற்படுவதுடன், காலதாமதமாக செல்லும் அவலமும் இருந்து வருகிறது. ஆகவே, மேம்பாலம் அமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்பினரும் உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.இது தொடர்பாக, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணியிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே துறை அதிகாரிகள், இரண்டு நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு, மேம்பாலம் அமைப்பதற்காக ரயில் பாதையை ஆய்வு செய்து வருகின்றனர்.மேம்பாலம் எவ்வளவு நீளம், அகலம் அமைக்க வேண்டும், அதற்கான, திட்டமதிப்பீடு எவ்வளவு என்பது போன்ற பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு அறிக்கையை, சென்னை ரயில்வே தலைமை நிலையத்துக்கு அனுப்பி வைப்பர்.அவர்கள், அறிக்கையை ஆய்வு செய்து மேல் நடவடிக்கைக்காகவும், ஒப்புதலுக்காகவும், புதுடில்லி அனுப்பி வைப்பர். அங்கிருந்து ஒப்புதல் பெற்றதும், நிதி ஒதுக்கீடு செய்து, நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்படும். இன்னும் மூன்று மாதத்தில் இப்பணி துவங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, ரயில்வே துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:ரயில்வே மேம்பாலம் கட்ட, அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் பேரில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை பள்ளிபாளையம் காவிரி பாலத்தில் இருந்து, 200 மீட்டர் தூரம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை அடிப்படையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்படும், என்றார்.

Link : http://www.dinamalar.com/district_detail.asp?id=661344

senthilsindia
March 6th, 2013, 03:30 PM
http://i49.tinypic.com/2ibdfdy.jpg

This is the place of Cauvery RS RUB...

No idea of how the ROB can be planned here...

The above news states that the survey has been done at 200mts from River banks...

Any idea of how it could be?!!?

Anyway a good news is that Namakkal district admin is better that they are approaching for new projects! whereas the Vendipalayam area Level crossings and RUBs are still unnoticed in the Erode district!

senthilsindia
March 7th, 2013, 03:21 PM
Status of the CauveryRS Underpass...
Have a look at it... It is not exactly a Road Under pass... It is just the place where the River Bridge starts...

http://www.hindu.com/2009/07/08/images/2009070851350301.jpg

http://www.hindu.com/2009/07/08/stories/2009070851350300.htm

senthilsindia
March 15th, 2013, 04:34 PM
One more good News for the City by Namakkal district...

1. Pallipalayam - Erode road bridge across Cauvery River parallel to existing old bridge.

2. A new ROB at Cauvery R.S. to ease traffic flow towards Kokkarayanpettai due to waterlogging at Odapalli Barage.

3. A new ROB at SPB Colony railway under bridge.

These 3 bridges definitely ease Traffic congestion and avoid circuitous routes for the existing traffic pattern.

http://www.skyscrapercity.com/showpost.php?p=101237490&postcount=256

senthilsindia
April 2nd, 2013, 05:55 PM
Again the proof for the difference b/w Erode & Namakkal...

Since the Ring Road is joining with Kokkarayanpet, they are widening the 14km long Kokkarayanpet-Tiruchengode Road...

They are ready to provide better infras... So, if Govt is ready to announce the Easter part of the Ring Road, definitely they will implement it before the phase-I...

One more beauty about this Road is that, while going through this road, you don't need to touch T.Gode town, instead you can take the bye-pass, which goes south of the hill to reach Namakkal Road...

http://www.skyscrapercity.com/showpost.php?p=101853318&postcount=266

senthilsindia
April 15th, 2013, 05:31 PM
Pallipalayam to get the following:

* Bus stop will be upgraded into a town BS @ 1.80 Crores...

* New Bridge across Cauvery connecting Pallipalayam-Karungalpalayam

* Roundabout will be constructed @ Ottanmethai junction

* Encroachments will be cleared on Sankari Byepass Road

* Komarapalayam Road to be expanded as 80feet road

http://www.skyscrapercity.com/showpost.php?p=102288244&postcount=274

senthilsindia
May 19th, 2013, 08:01 AM
Pallipalayam Bus stop expansion works started...

Encroachments are being cleared..

Budget alloted Rs.80Lakhs...

On both the sides of the Road, they are going to construct shelter-type Bus-stops (like those in Chromepet, Tambaram,...)

Also they are going to construct a Pedestrain bridge/Subway connecting both the sides...

http://www.dinamalar.com/district_detail.asp?id=716207