|
|
| daily menu » rate the banner | guess the city | one on one |
|
|
#21 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
OSAI
Osai is a NGO based in coimbatore.
OSAI have been involved in the creation of eco-based activities in many parts of the state. http://www.greenosai.org/
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#22 | |
|
Registered User
Join Date: Mar 2007
Posts: 307
Likes (Received): 0
|
Nicely researched article. My notes in red.
http://www.expressbuzz.com/edition/s...e=rSY|6QYp3kQ= Quote:
|
|
|
|
|
|
|
#23 | |
|
Registered User
Join Date: Mar 2007
Posts: 307
Likes (Received): 0
|
Quote:
|
|
|
|
|
|
|
#24 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
Effluents floating in River Noyyal
Polluted water at Kasipalayam, down stream of the Noyyal River in Tirupur.
![]() ![]() Tirupur: Despite the ban on discharge of industrial effluents into River Noyyal imposed by the Supreme Court, which came into force on Tuesday (January 6), large quantities of coloured effluents were seen passing along its stretch in the city throughout the day . According to the Supreme Court ruling, dyeing units should not discharge treated or untreated effluents into the river beyond January 5. Dyers Association of Tirupur (DAT) puts the blame on dyeing units, which are “not members of the Association”, functioning in an unorganised manner. “Such units which function from houses and small edifices are responsible for the discharge of effluents since the DAT members, except a very few units having individual effluent treatment plants, are already on an indefinite strike,” DAT president S. Samiappan told The Hindu. Mr. Samiappan added that the Association had requested the Tamil Nadu Pollution Control Board (TNPCB) to crack down on the erring dyeing units before they could malign the law-abiding member units of the DAT. Meanwhile, TNPCB officials led by Assistant Engineer G. Udaya Kumar visited some of the small-scale dyeing units pointed out by the DAT. Subsequently, show-cause notices were issued to them after four of them were allegedly found discharging effluents. http://www.hindu.com/2010/01/07/stor...0750050100.htm
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#25 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#26 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
Conserve Nilgiris biosphere for posterity
C.R. Jayaprakash of the Nilgiri Wild Life and Environmental Association speaking on Endemics in Nilgris Biosphere in Coimbatore on Tuesday as part of Coimbatore Vizha. –
![]() ![]() Coimbatore: Development at the cost of nature will lead to the destruction of Nilgiris Biosphere Reserve leaving a lasting impact on the future of Coimbatore, said C.R. Jayaprakash of Nilgiris Wildlife Environment Association on Tuesday. He was making a presentation on “Endemics of Nilgiris” as part of the Kovai Vizha celebrations. A short film on Ukkadam Periyakulam by S. Subish, M.A. Communication student of PSG College of Arts and Science was screened. It traced the history of Noyyal, Periyakulam and its benefits to Coimbatore and the damage caused by unmindful human exploitation. Hotspot The 5,520-acre Nilgiris Biosphere Reserve is declared a bio-diversity hotspot in 1986. It is spread over three Southern states. Studies have revealed that 132 of the 3,300 flora and 125 fauna in the reserve are becoming endangered. Rampant encroachment of land has resulted disturbing the migratory corridors of elephants. It has lead to the increase in incidents of man-animal conflicts resulting in loss of human lives and damage to crops besides death of elephants either due to electrocution or by trains. The biosphere is the air, food and climate guardian of Western Tamil Nadu and Indian peninsula. Tree felling, monoculture destroying native species, grazing in forest areas, unsustainable horticulture and agriculture activities, unplanned and devastating tourism-related activities are damaging the biosphere. A photographs exhibition on wildlife of the Nilgiris that are facing the threat extinction was organised. http://www.hindu.com/2010/01/07/stor...0754880500.htm
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#27 |
|
Registered User
Join Date: Mar 2007
Posts: 307
Likes (Received): 0
|
|
|
|
|
|
|
#28 | |
|
Registered User
Join Date: Mar 2007
Posts: 307
Likes (Received): 0
|
http://www.earthtimes.org/articles/s...,1108033.shtml
Quote:
|
|
|
|
|
|
|
#29 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
புலிகளை பாதுகாக்க கேரள - தமிழக அதிகாரிகள்
விருதுநகர்: இந்தியாவில் அழிந்து வரும் புலிகள் இனத்தை பாதுகாக்க பெரியாறு புலிகள் சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தை சேர்ந்த வன அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அழிந்து வரும் பத்து உயிரினங்களில் புலிகள் முதலிடம் வகிக்கிறது. 100 ஆண்டுகளில் 95 சதம் குறைந்துவிட்டன. தற்போது, உலகில் 3,500 புலிகள் மட்டுமே உள்ளன. புலிகளை பாதுகாக்க ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை வனத்துறை செலவு செய்து வருகிறது. ஒரு புலி, உயிர் வாழ, 24 சதுர கி.மீ., வனப்பரப்பு வேண்டும். கேரள மாநிலம் முல்லை பெரியாறு வனப்பகுதியில், 666 ஏக்கர் நிலப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை வனப்பகுதியும் புலிகள் சரணாலயமாக உள்ளது. இங்கு புலிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், 16 புலிகள் தான் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இரண்டு பகுதிகளை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளின் கூட்டு கூட்டம், தேனியில் ஜன., 12ம் தேதி நடக்கவுள்ளது. இதில், புலிகள் வேட்டையாடப்பட்ட பகுதிகள், வாழ்வதற்கு தேவையான சூழல்கள் ஏற்படுத்தி தருதல், சரணாலயங்களில் புலிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தருதல், புலிகள் இனத்தை அதிகரிக்க வனத்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. மதுரை, திருநெல்வேலி, ஸ்ரீவில்லிப்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வன அதிகாரிகள், வன உயிரினப்பாதுகாவலர்கள், கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா, இடுக்கி மாவட்ட வன அதிகாரிகள், வன உயிரினப்பாதுகாவலர்கள் கலந்து கொள்கின்றனர். http://www.dinamalar.com/General_det...?news_id=20640
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#30 |
|
Registered User
Join Date: Mar 2007
Posts: 691
Likes (Received): 41
|
Sampathkumar --> This is the most important of all topics. Tamilians have in the last 30-40 years lost all interest in keeping water and air clean in pursuit of short term gains in form of dyeing and leather industry. Slums and chemical industries are another major culprit ruining all water bodies. Thanks very much for starting this topic
|
|
|
|
|
|
#31 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
Climate change and health are interconnected
CHENNAI: As we get ready to turn the decade, it is obvious that whatever lifestyle modifications we make, it is important to factor in climate change and its impact on health. The world has already taken cognisance of the impact of climate change on health, but the different arguments are made on different platforms and are yet to come together forcefully enough to influence policy.
Speaking at the K. S. Sanjivi Memorial Lecture in the city recently, K. Srinath Reddy, president, Public Health Foundation of India, stressed the need for public health to be wholistic. “If we ignore other realities such as climate change and ignore the interconnectedness, again we will be taking a limited perspective,” he said. Dr. Reddy used an example to highlight the interconnectedness. Cardiologists from the WHO recommend a dietary modification to reduce red meat consumption; the World Cancer Report says the same thing as it causes cancers of the digestive tract; and climate change proponents have been calling for reduction of livestock population. “During pandemics we run helter-skelter, looking for vaccines. We don’t question why over the last 30 years, there has been a new infectious disease outbreak every year, 60 per cent of them zoonotic. This is not because animals have suddenly turned virulent. It is because large animals are being bred in captivity in pathetic conditions, putting them in a position to transmit viruses that mutate easily. Then, it is also necessary to grain feed them, leading to deforestation, and thereon to food insecurity, cancer, cardiovascular diseases. This is the larger picture,” Dr. Reddy said. Again, at a meeting held more recently at Kilpauk Medical College, there emerged more proof that the establishment was indeed worrying about the impact of climate change on health. Corporation Health Officer P. Kuganantham said, “With global warming and climactic changes, coastal regions are likely to be affected more. With water levels predicted to rise, salinity of drinking water will also increase and directly impact on the health of the people. We are talking about hypertension and cardiac illnesses, here,” he added. But what is really bothering him is that the change of weather is likely to cause the proliferation of more numbers of vectors and rodents that are primarily disease carrying agents. “The infection they spread will be different, organisms will mutate, and our drugs may not work anymore,” Dr. Kuganantham explained. Therefore, emerging and re-emerging infectious diseases would be a great cause for concern for healthcare providers and policy makers. He stresses as Dr. Reddy does on addressing climate change and public health from the same platform. “In fact, the WHO even says that in future, policy makers and planners should keep public health experts at hand while developing strategies,” Dr. Kuganantham said. Going by what Mayor M.Subramaniam claimed, it seems that some cognisant changes are afoot in the Corporation area. According to him, the civic body is trying to instal solar lights wherever possible, and encouraging planting of more saplings to create green spaces and cyclist tracks. http://www.hindu.com/2010/01/08/stor...0859540300.htm
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#32 | |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
Quote:
Karur, tiruppur, cuddalore are worst in water pollution. Chennai & Coimbatore worst in air and noise pollution. Coimbatore district ground water level is very very low than any other districts in india. Everywhere in TN we can see garbage menace. No public toilets are clean. Recently kerala bio wastes are dumped in border districts in TN. They want to keep their state clean at our the cost of TN. E-wastes and hazardous china toys are dumped in TN only. We need to save our TN.... ![]()
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
|
#33 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
TN Forest and Agri engg websites
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet Last edited by Sampathkumar; January 8th, 2010 at 03:05 PM. |
|
|
|
|
|
#34 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
தமிழ்நாட்டுக்குப் பாடம் சொல்லும் தற்கொ
மராட்டிய மாநிலம், புனேயிலிருந்து 300 கல் தொலைவுக்கு அப்பால் உள்ளது தேன்காவ்ங் கிராமம். கரும்பு ஏற்றிய வண்டிகள் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், பெரும்பகுதி நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே காட்சியளிக்கின்றன.
புனேயிலிருந்து தேன்காவ்ங் போகும் வழிநெடுக பருத்திக் கிட்டங்கிகளைக் காண முடிகிறது. ஆம், நிறைய உழவர்கள் வானவாரியாக ஓரிரு முறை நீர்பாய்ச்சியே பருத்தியை பயிர் செய்கிறார்கள். இப்படி சாகுபடி செய்பவர் மத்தியில், இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களைக் காண்பது வியப்பாக இருந்தது. வேளாண் கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள், நிலத்தை மீட்டெடுத்து இயற்கை வேளாண்மை செய்கிறார்கள். 'ரசாயனங்கள் நிலவளம் அழிக்கும்... நமது உடல் நலம் சிதைக்கும்' என்று பாட்டெழுதிப் பாடுகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள்கூட இப்பாடல்களைப் பாடும் அளவுக்கு விழிப்புடன் இருப்பது வியப்பளித்தது. வானம் பார்த்த பூமியில் சாகுபடி செய்யும் இந்த உழவர்கள்கூட பருத்தி சாகுபடி செய்கிறார்கள். அதைத் தனிப் பயிராகப் பயிரிடவில்லை. 10 அல்லது 12 அடி இடைவெளியில், ஒரு வரிசை துவரை பயிரிட்டுள்ளார்கள். அது சடைசடையாகக் காய்த்துத் தொங்குகிறது. இடையில் கம்பு, புளிச்சை, மல்லி, கொண்டைக்கடலை பயிர் செய்திருக்கிறார்கள். தக்காளி, கீரை, வெண்டை, முள்ளங்கி என்று காய்கறிகளையும் பயிர் செய்கிறார்கள். புளிச்சை விதையில் இருந்து எண்ணெய் எடுப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தப் பயிர்களுக்கு இடையில்தான் பருத்தியும் விளைந்து நிற்கிறது. 'பருத்தி விதைகளை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டேன். 'பல உழவர்களின் நிலங்களையும் பார்க்கிறோம். எங்கு பருத்தி பெரிதாகவும் முழுமையாகவும் வெடித்திருக்கிறதோ, அந்தப் பயிரில் இருந்து சில வெடித்தக் காய்களைக் கொண்டு வந்து, அவற்றில் உள்ள விதைகளை எங்கள் நிலத்தில் விதைக்கிறோம். அதில் வரும் விளைச்சலில் இருந்து விதை எடுத்து, அடுத்து வரும் பருவத்தில் விதைக்கிறோம்' என்றார்கள். பருத்தியைப் பஞ்சு வியாபாரியிடம் விற்றுவிட மாட்டீர்களா? என்று கேட்டேன். 'எங்கள் நிலத்தில் விளையும் பயிரில் பெரிது பெரிதாகவும், முழுமையாகவும் விளைந்து வெடித்தப் பருத்தியை, விதைகளுக்காகத் தனியாக எடுத்து வைத்து விடுவோம்' என்றார்கள். என் மனதுக்குள் ஒரு தென்றல் வீசியது. 'விதை எடுத்த பஞ்சையா வியாபாரிகள் வாங்குகிறார்கள்?' என்று கேட்டேன். 'இல்லை... இல்லை... நேரடியாக மில்லிலேயே பருத்தியைக் கொண்டு போய் கொடுக்கிறோம். அவர்கள் விதையைப் பிரித்துக் கொடுப்பதோடு, விதைக்கான விலையைக் கழித்துக் கொண்டு பஞ்சுக்கான விலையைக் கொடுத்து விடுகிறார்கள்' என்றும் கூறினர். பருத்தி விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் இந்த ஏழை விவசாயிகள்... தமிழ்நாடு, ஆந்திர உழவர்களுக்கெல்லாம் இப்படி வழிகாட்டியபடி முன்னேறிச் செல்வது மனத்துக்கு இதமாக இருந்தது. மராட்டிய உழவர்களுடன் இயற்கை வேளாண் உத்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்தபோது, அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் பொம்மிடி அருண், 'ராசி நிறுவனத்தின் பி.டி. பருத்தியை பயிர் செய்திருந்த தருமபுரி மாவட்டத்து உழவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். காய்கள் வெடிக்காமல் செடிகள் வாடி வதங்கிப் போயின. தர்மபுரி உழவர்களின் இழப்பை சரி செய்ய ஏதாவது செய்தாக வேண்டும்' என்றார் (பசுமை விகடன் டிசம்பர் 10-ம் தேதியிட்ட இதழில் இதுபற்றி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது). பி.டி. பருத்தி பொய்த்துப் போவது இது முதல் முறை அல்ல. 2006-ம் ஆண்டு தர்மபுரி - சேலம் மாவட்டங்களில் மகிகோ நிறுவனத்தின் பருத்தியை விதைத்தனர். வளர்ந்த செடிகளில் காய் வெடிக்காமல் போகவே, உழவர்கள் ஆளுக்கு ஒரு செடியைக் கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். கம்பெனிக்காரர்களை தேடிப் பிடித்து ஆட்சியரிடம் நிறுத்தினார்கள் உழவர்கள். மாவட்ட ஆட்சியர், உழவர் பிரதிநிதிகள், கம்பெனிக்காரர்கள் கூடிப் பேசி ஏக்கருக்கு 5,000 ரூபாய் இழப்பீடு என்று முடிவு செய்தார்கள். வேளாண் அமைச்சர், வீரபாண்டி ஆறுமுகம் தன் கையாலேயே இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். அப்போது, ''உழவர்களின் கண்ணீர் துடைக்கும் விதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் கலைஞர் உத்தரவு இட்டார். ஆதலால், இந்தியாவிலேயே முதன்முதலாக மகிகோ கம்பெனியிடம் இழப்பீடு வாங்கிக் கொடுப்பது தி.மு.க. அரசுதான்'' என்று மார்தட்டிக் கொண்டார். இவர் இப்படிச் சொன்னதற்கு அடிப்படை உண்டு. ஆந்திர மாநிலத்தில் பி.டி விதை பழுதுபட்டதால், விசாரணைக் குழு ஆய்ந்தறிந்து சொன்னதன் அடிப்படையில் மகிகோ கம்பெனி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அந்தப் பகுதி ஆட்சியர். ஆனால், அதை மறுத்து நீதிமன்ற படியேறிவிட்டன கம்பெனிகள். ஆகவேதான் பெருமைப்படுகிறார் வீரபாண்டி ஆறுமுகம். 'வெற்றிகரமாக அன்றைக்கு மகிகோ கம்பெனியிடம் இழப்பீடு வாங்கித் தந்தவர், 2010-ம் ஆண்டில் ராசி கம்பெனியிடமும் இழப்பீடு வாங்கித் தருவார்' என்று உழவர்கள் எதிர்பார்ப் பதில் தவறு இல்லை. இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு 'பசுமை விகடன்' கொண்டு சென்றபோது, அவர் அளித்திருக்கும் கனிவான பதில் வரவேற்கக்கதுதான். ஆனால், 'உழவர்கள் இணை இயக்குநரைப் பார்க்கட்டும்' என்று சொல்வது சரியாகப் படவில்லை. மாவட்ட ஆட்சியரே, இணைஇயக்குநரை அழைத்து 'வேளாண் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?' என்று கேட்பதுதான் முறை. வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளை அழைத்து, தர்மபுரி மாவட்டத்தில், 'துல்லிய வேளாண்மை செய்து கொண்டிருக்கிறீர்களே இங்கு, பி.டி. பருத்தி காய்ந்து போனதற்கு என்ன காரணம் கூறுகிறீர்கள்?' என்று கேட்டிருக்க வேண்டும். தரப்படும் இழப்பீடு, அனைத்து உழவர்களையும் சென்றடைய ஒரு குழு அமைப்பதே உடனடியான தீர்வாக அமையும். இதில் தொழில்நுட்ப வல்லுநர்களை மட்டுமே இணைப்பது சரியல்ல. தொழில்நுட்ப வல்லுநர்களைச் சரிக்கட்டுவது கம்பெனி களுக்கு கை வந்த கலை. ஆந்திராவில் இது நடந்தது. 'இழப்பு, விதைகளால் நேர்ந்தது அல்ல' என்று எழுதி முடித்தார்கள். 'இந்தத் தீர்மானம் எனக்குச் சம்மதம் இல்லை' என்று குழு உறுப்பினர் ஒருவர் எழுதிக் கையெழுத்திடவே உழவர்கள் தப்பித்தார்கள். ஆகவே, விசாரணைக் குழு அமைக்கும்போதே விவசாயிகள் பிரதிநிதியையும் அதில் சேர்ப்பதுதான் முறைகேடு நிகழாது தடுக்கும் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கும். தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை... இந்த லட்சணத்திலேதான் பி.டி கத்திரி, தக்காளி, வெண்டையெல்லாம் இனி வரிசை கட்டி வர இருக்கிறது. வாழ்க மக்களாட்சி! Thanks : Pasumai Vikatan
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#35 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
விளைநிலத்தில் எரிசாராய ஆலை?
''ஆலைகளிலிருந்து வெளியாகும் சூழலுக்குக் கேடான வாயுக்களை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களுக்கு தடைபோட வேண்டும். ஏரி, குளம், ஆறு என்று பாசன நீர்நிலைகளை மாசுபடுத்துவோர் யாராக இருந்தாலும் சட்டம் பாயும்"
![]() ![]() -ஏதாவது சுற்றுச்சூழல் சார்பான கூட்டமென்றால்... இப்படி வாய் கிழிய ஒரு முழக்கம்! ''எங்கள் ஆட்சியில்தான் தொழிற்புரட்சி நடத்தப்பட்டிருக்கிறது. இங்கே கார் தொழிற்சாலை, சாராயத் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை என்று அத்தனை தொழிற்சாலைகளையும் கொண்டு வந்தது நாங்கள்தான். இது பொற்கால ஆட்சி" -ஏதாவது தொழிற்சாலை திறப்பு விழா என்றால், அங்கே இப்படியரு வாய்ஜம்பம்! இப்படிப்பட்ட இரட்டை நாக்கு அரசியல்வாதிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டேயிருக்க... காற்று, நீர், நிலம், ஆகாயம் என்று அத்தனையும் தொடர்ந்து மாசுபடுத்தப்பட... கிராமப்புற மக்களின் நிரந்தர வாழ்வாதாரமான விவசாயம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது! ''அந்த வரிசையில் எங்க ஊரையும் சேர்க்கறதுக்கு அதிகாரிங்க... அரசியல்வாதிங்க எல்லாரும் கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கறாங்க..." என்று புலம்புகிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள். ![]() ![]() பறிபோன அமைதி! வேளாண்மைக்கு ஏற்ற வளமான பூமி: ஊரைச் சுற்றி ஓடும் ஒன்றிரண்டு ஆறுகள்; அதன் காரணமாக பெருகி நிற்கும் நிலத்தடி நீர்; கடுமையான உழைப்பைக் கொடுக்கும் விவசாயிகள்; வஞ்சனை இல்லாமல் விளைந்து கிடக்கும் நெல், தென்னை, கடலை, உளுந்து, மரவள்ளி உள்ளிட்ட பல பயிர்கள் இதுதான் வடசேரி மற்றும் சுற்றுவட்டார பூமியின் அடையாளம். இதைத் தவிர, ஆன்மிக முயற்சிகள்... சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் முயற்சிகள் என உருப்படியான விஷயங்களில் மக்கள் கவனத்தைச் செலுத்தவே, 'அமைதிப் பூங்கா' என்பதாகவே இருந்தது வடசேரி. ஆனால், 'இங்கே எரிசாராயத் தொழிற்சாலை அமைக்கப் போகிறோம்' என்றொரு அறிவிப்பு வந்த நிமிடத்திலிருந்து போராட்ட பூமியாக மாறிவிட்டது. வடசேரியில் ஏற்கெனவே அமைந்துள்ள 'கிங்க்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், தற்போது புதிதாக எரிசாராய ஆலையைத் துவக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறது. இதையடுத்து, ''இந்த ஆலை, ஊருக்கே உலை வைத்துவிடும். தி.மு.க-வைச் சேர்ந்தவரான முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் குடும்ப உறுப்பினர்கள் இந்தத் தொழிற்சாலையில் பங்குதாரர்களாக இருப்பதாக கூறப்படுவதால், முறைப்படி ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமலே தடை இல்லாச் சான்று வழங்கிவிட்டார்கள் அதிகாரிகள்" என குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். மண்ணு மலடாப்போச்சு..! வடசேரியைச் சேர்ந்த ராஜேந்திரன், ''இப்ப புதுசா வரப்போற ஆலையை விடுங்க. ஏற்கெனவே அவங்க வெச்சுருக்கற கிங் கெமிக்கல்ஸ் ஆலையால ஏகப்பட்ட பிரச்னை. இதோ... இந்த ஃபோட்டோவைப் பாருங்க.. கடலை, மரவள்ளி எல்லாம் கருகிக்கிடக்குறத. இது எங்க நிலத்துல எடுத்த போட்டோதான். ஆலைக்கு பக்கத்துலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் இருந்துச்சு. ஆலைக்கழிவு எங்க நிலத்துல புகுந்ததால எதுவுமே விளையல. 3 ஏக்கர்ல கடுமையான பாதிப்பு. மாசுக்கட்டுப்பாடு வாரியத்துல பலமுறை புகார் தெரிவிச்சும், எந்த நடவடிக்கையுமே எடுக்கல. குட்டையை வெட்டி, அதுலதான் கழிவுநீரையெல்லாம் தேக்கி வச்சிருந்தாங்க. மழைக் காலத்துல குட்டையோட வரப்பு உடைஞ்சு, எங்க நிலத்துக்குள்ள கழிவுநீர் புகுந்துடுச்சு. இனிமே இந்த நிலத்தை வெச்சுக்கிட்டு நம்மளால காலம் தள்ள முடியாதுனு ஆலைக்காரங்ககிட்டயே வித்துட்டேன்" என்று வேதனைப் பட்டவர், ''குடியிருப்புப் பகுதியிலிருந்து 300 அடி தூரத்துக்குள்ள தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இதோ பாருங்க பக்கதுலேயே ஏகப்பட்ட வீடுகள் இருக்குறத" என்று சுட்டிக்காட்டிய இடத்தில வரிசையாக வீடுகள். பாலைவனமாக மாறும்...! மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுவாமிநாதன் மற்றும் சக்திவேல், ''பழைய ஆலையோட பாதிப்பே ரொம்ப அதிகம். இதுல புதுசா எரிசாராய ஆலை வேற. ரெண்டு ரசாயன ஆலைகள் இயங்கினா என்னாகும்னு நினைச்சுப் பாக்கவே பயமா இருக்கு. அடுத்தாப்புல பாட்டிலிங் தொழிற்சாலை, நொதிப்பாலைனு தொடங்குவாங்க. இதையே காரணமா காட்டி, மத்தவங்களும் தொழிற்சாலை தொடங்குவாங்க. இந்தப் பகுதியே தொழிற்பேட்டையா மாறும். வடசேரி மட்டுமில்லாம சுத்தியுள்ள கிராமங்களும் படிப்படியா பாலைவனமா மாறிடும்’’ என்று அபாயமணி அடித்தார். நீராதாரம் நிச்சயம் பாதிக்கப்படும்! வடசேரியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கவுதமன், ''தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மிக அதிகமான பாதிப்புள்ள கழிவுகளை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அதிசிவப்பு அடையாளம் கொடுத்திருக்கிறது. இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் எரிசாராய ஆலை என அழைக்கப்படும் 'டிஸ்டில்லரிஸ்' தொழிற்சாலை உள்ளது. மண், காற்று, நீர் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக மாசுப்படுத்தக் கூடியவை இத்தகைய ஆலைகள். இதுபோன்ற ஆலைகள், முக்கிய நீர் ஆதாரங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 5 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் தொடங்கக் கூடாது என அரசாணையே உள்ளது. ஆனால், இந்த ஆலையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளேயே காலகம் வடிகால், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கண்ணன் ஆறு ஆகியவை ஓடுகின்றன. இதன் மூலம் வடசேரியைச் சுற்றியுள்ள இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பாசன வசதி கிடைக்கிறது. எரிசாராய ஆலை தொடங்கப்பட்டால், இந்த நீர் ஆதாரத்துக்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ![]() ![]() ஒரு போர்வெல்லுக்கும் இன்னொரு போர்வெல்லுக்கும் குறைந்தபட்சம் 150 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது விதி. மண்ணின் தன்மையைப் பொறுத்து இந்த தூரம் இன்னும் அதிகமாகும் (150 முதல் 600 மீட்டர்). புதிதாக போர்வெல் போடும்போது இந்த விதிமுறையின் அடிப்படையில்தான் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், விவசாயிகள் போட்டுள்ள போர்வெல்களிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குட்பட்ட இடத்தில்தான் ஆலைக்காக போர்வெல் போடப்பட்டுள்ளது. தினமும் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். தினமும் இவ்வளவு தண்ணீரை ஆலை உறிஞ்சிவிட்டால், அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு எப்படி நிலத்தடி நீர் கிடைக்கும்?’’ என்று கேள்விகளாக எழுப்பினார். மக்கள்தான் மாத்தி சொல்றாங்க...! குற்றச்சாட்டுகள் குறித்து ஆலைத்தரப்பின் பதிலைத் தேடிச் சென்றபோது, அதன் நிர்வாக அதிகாரியான செல்வம் நம்மிடம், ''நிறுவன உரிமையாளர்கள் சார்பாதான் உங்ககிட்ட பேசுறேன். டி.ஆர். பாலுவுக்கும் இந்த நிறுவனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. ஆலை அமைக்கற விஷயத்துல எந்த அதிகார துஷ்பிரயோகமும் நடக்கல. ஊர் மக்களில் சிலர்தான் தேவையில்லாம வதந்தி பரப்புறாங்க. இதுல அரசியல்வாதிகளோட தூண்டுதலும் இருக்கு. தினமும் 18 லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கறதுக்கு நீர்வளத் துறை அனுமதி கொடுத்திருக்கு. வெறும் நாலு போர்வெல்தான் இருக்கு. ஆனா, 7 போர்வெல்னு பொய் செய்தி பரப்பறாங்க. எரிசாரய ஆலையிலிருந்து வெளியாகப்போற கழிவை எரிச்சி, அப்படியே ஆவியாக்கிடுவோம். 'இன்சினரேஷன் டெக்னாலஜி' (Incineration Technology) என்ற நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் போறோம். 60 மீட்டர் உயரத்துக்கு குழாய் அமைச்சி, ஆவியை வெளியேத்தப் போறோம். அதனால கழிவு வெளியாக வாய்ப்பே இல்லை’’ என்றார். ஆலையின் உதவி மேலாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அம்பிகாபதி ''அசிட்டிக் ஆசிட் தயாரிக்கத்தான் பழைய ஆலை துவங்கப்பட்டது. 92-ம் வருஷத்துல இருந்து, 96 வரைக்கும் தொடர்ச்சியா ஆலை இயங்குச்சு. அதுக்குப்பிறகு மூலப்பொருள் (எத்தில் ஆல்கஹால்) போதிய அளவு கிடைக்கல. விலையும் அதிகரிச்சதால கட்டுப்படியாகல. அதனால ஆலையை இயக்க முடியல. இப்ப நாங்களே எத்தில் ஆல்கஹால் உற்பத்தி செஞ்சு, பழைய ஆலையையும் தொடர்ந்து இயக்கப் போறோம். ஏற்கெனவே உள்ள இந்த ஆலைக்காக முன்னாடியே சுத்திகரிப்பு நிலையம் இருக்கு. கழிவுநீரை, மென்னீராக்கிதான் வெளியேத்துறோம்’’ என விளக்கமளித்தார். ''தி.மு.க-வைச் சேர்ந்தவங்களும் எதிர்ப்புதான்" ''வடசேரி மக்களில் ஒரு தரப்பினர் மட்டும்தான் எரிசாராய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்ற கிராமங்களில் எதிர்ப்பு இல்லை. எனவே, இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது" என்ற ஆலை நிர்வாகத் தரப்பில் ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதில் உள்ள உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக வடசேரியைச் சுற்றியுள்ள நெம்மேலி, கீழக்குறிச்சி, அண்டமி, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம், மண்டலக் கோட்டை, மோகூர், சிராங்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். பெரும்பாலும் எரிசாராய ஆலைக்கு எதிரான அலையே வீசிக் கொண்டிருந்தது! தளிக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன் "நான் தி.மு.க-வோட முன்னாள் கிளைச்செயலாளர். கட்சி வேற... வாழ்க்கை வேற. எரிசாராய ஆலை வந்தா நாங்க கடுமையா பாதிக்கப்படுவோம். கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்படும். அதனால், ஒட்டுமொத்த கிராமங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கோம். இந்தப் பகுதியில உள்ள எல்லா கிராமங்களுமே தி.மு.க. கோட்டைதான். ஆனா, கட்சிப் பாகுபாடு இல்லாம எல்லாருமே போராட்டக் களத்துலதான் இருக்கோம். கண்டிப்பா, தமிழக முதல்வர் எங்கள காப்பாத்துவார்’’ என நம்பிக்கையோடு சொன்னார். நம்பிக்கை வீண்போகாமல் இருந்தால் சரி! ![]() ![]() அதிகாரிகள் சொல்வது என்ன? விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அதிகாரிகள் தரப்பு அலட்சியமாக நடந்துகொண்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டவே... அதிகாரிகளைச் சந்தித்தோம். ஒவ்வொருவரின் பதிலும் 'நச்' ரகம்தான். நீங்களே படித்துப் புரிந்துகொள்ளுங்கள்! தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர்: ‘‘வடசேரியில தோட்டக்கலைப் பயிர்கள்தான் இருக்கின்றன. அதனால் வேளாண் துறை ஆய்வு செய்ய முடியாது." மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் லோகநாதன்: ‘‘தோட்டக்கலைப் பயிர்களே வடசேரியில இல்லை. அதனால் எங்களுக்கு சம்பந்தம் இல்லை." நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் சண்முகம்: "ஆலையில் இருந்து 175 மீட்டர் தூரம் வரை வேற எந்த ஒரு விவசாய போர்வெல்லும் இல்லை. அதனால்தான் அனுமதி கொடுத்தோம்." மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதிவாணன்: "ஆலையில் இருந்து 300 அடி தூரம் வரை வீடுகள் இருக்கக் கூடாது என்பதுதான் விதி. எந்த வீடும் இல்லை என்பதால் தடைஇல்லா சான்று கொடுத்தோம்." மாவட்ட ஆட்சியர் சண்முகம்: "வடசேரி மக்கள் கொடுத்த மனுக்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டேன். பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு, எரிசாராய ஆலைக்கு அனுமதி கொடுப்பார்கள்
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#36 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
Action against those who pollute River noyyal
நொய்யல் ஆற்றின் மாசுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை
திருப்பூர், ஜன.8: சாய, சலவை ஆலைகள் வேலைநிறுத்தத்துக்கு பிறகும் நொய்யல் ஆற்றில் மாசுபட்ட நீர் செல்வதற்கு காரணமானவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் சாய, சலவை ஆலைகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் 75 சதவீத மானியம் கோரி திருப்பூர் சாய, சலவைகள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் 16வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், அச்சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் எஸ்.சாமியப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. பொதுச்செயலர் கே.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சாய ஆலைகளின் கோரிக்கையை ஏற்று பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாநில அரசு ரூ.120 கோடி வழங்க உறுதியளித்துள்ளதற்காக தமிழக அரசுக்கும், சாய ஆலைகள் சங்கத்தினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைந்து வாழ்த்திய சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பனியன் தொழில்அமைப்பினர், அரசியல் கட்சியனர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. சாய, சலவை ஆலைகள் வேலைநிறுத்தம் செய்த 15 நாட்களுக்கு பின்னரும் நொய்யல் ஆற்றில் மாசு கலந்த நீர் குறைவில்லாமல் செல்கிறது. இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நொய்யல் ஆற்றின் மாசுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையங்களை தொடர்ந்து இயக்கிட தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவிகளை உடனடியாக பெற அனைத்து பனியன் தொழில் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இப்பிரச்னைóகு சுமூக தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. துணைத் தலைவர்கள் கே.ரவி, சி.துரைசாமி, இணைச் செயலர்கள் எஸ்.முருகசாமி, கே.ஆர்.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். http://www.dinamani.com/edition/stor...36&SEO=&Title= ![]() Good joke
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#37 | |
|
Registered User
Join Date: Mar 2007
Posts: 307
Likes (Received): 0
|
http://pib.nic.in/release/release.asp?relid=56010
Quote:
|
|
|
|
|
|
|
#38 | |
|
Registered User
Join Date: Mar 2007
Posts: 307
Likes (Received): 0
|
http://www.frontlineonnet.com/fl2626...1262606400.htm
Quote:
|
|
|
|
|
|
|
#39 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
காலம் கடந்துவிடவில்லை
நீர்நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்களைப் பாதுகாப்பதா? அல்லது அங்கு ஏழைகள் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதா, கூடாதா? என்ற சங்கடமான கேள்விக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்துள்ள பதில் மிகத் தெளிவானது. "இரண்டுமே சமூகப் பிரச்னைதான். ஆனால், நீர்நிலைகளையும் நீர்வரத்துப் பகுதிகளையும் பாதுகாப்பதுதான் இதில் முக்கியமானது' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம். தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும். ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன. நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன. நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை. கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும் http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=178064&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=<font%20color="red">தலையங்கம்:</font>%20காலம்%20கடந்துவிடவில்லை
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
|
|
#40 |
|
Registered User
Join Date: Dec 2007
Location: COIMBATORE- SINGAPORE
Posts: 1,305
Likes (Received): 6
|
மண் வளம் குறைந்ததால் நோய்கள் அதிகரித்து&
மண் வளம் குறைந்ததால் நோய்கள் அதிகரித்துவிட்டன
கோவை, ஜன.10: மண் வளம் குறைந்துவிட்டதால் நோய்கள் அதிகரித்து வருகின்றன என்று மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குநர் உமேஷ்குமார் கூறினார். கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் அவர் பேசியது: உயிரினங்களை பாதுகாப்பதில் முன்னோர்கள் தீவிர ஆர்வம் காட்டினர். அறிவியல் பூர்வமான காரணங்களை அறியாமலே உயிர் ஆதாரங்களை முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். உயிர் ஆதாரங்களை பாதுகாக்காதது, மண் வளம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் நோய்கள் அதிகரித்துவிட்டன. பருவநிலை மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. உயிர் இயற்பியல், உயிர் தொழில்நுட்பவியல் உள்ளிட்டவற்றில் உயிரியியல் முக்கிய அங்கம் வகிக்கிறது. அன்றாட வாழ்வில் நுண்ணுயிர்களின் பங்கு முக்கியமானது. தினமும் குடிக்கும் மோரில் உயிருள்ள பாக்ட்டீரியாக்கள் உள்ளன. இவை குடல் புற்றுநோயை உருவாக்கும் பாக்ட்டீரியாக்களை குடலோடு ஒட்டவிடாமல் தடுத்துவிடுகின்றன. இதேபோல ஸ்டெரெப்மோமைசிஸ் என்ற பாக்ட்டீரியா இனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அன்டிபயாட்டிக்ஸ்களை உற்பத்தி செய்கிறது. அறிவியல் வளர்ச்சியால் தான் இதுபோன்ற எதிர் உயிர் ஆதாரங்களை கண்டுபிடிக்க இயலும் என்றார். http://www.dinamani.com/edition/stor...டன
__________________
Someone's is sitting in the shade today because someone planted a tree a long time ago- Warren Buffet |
|
|
|
![]() |
| Thread Tools | |
| Display Modes | Rate This Thread |
|
|