SkyscraperCity Forum banner

Tirunelveli - General News

123019 Views 878 Replies 29 Participants Last post by  JOHNSON KENNADY
Dear Tirunelveli forumers
Lets discuss about the General news happened in Tirunelveli.

Please make contribute and support:)
1 - 20 of 879 Posts
தித்திக்கும் திராட்சை உற்பத்தி தொடர்ந்து சரிவு! * திகைப்பில் கடையநல்லூர் விவசாயிகள்


கடையநல்லூர்: தமிழகத்தில் திராட்சை உற்பத்தியில் இரண்டாவது நகரமாக விளங்கி வரும் கடையநல்லூரில் திராட்சை விளைச்சல் கேள்விக் குறியாகியுள்ளது.தமிழகத்தில் திராட்சை தேனி மாவட்டம் கம்பத்தையடுத்து, நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அதிகமாக திராட்சை பயிர் செய்யப்படுகிறது. கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், தார்க்காடு, திரிகூடபுரம், மேலக்கடையநல்லூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலத்தில் திராட்சை பயிரிடப்பட்டு வந்தது.இங்கு உற்பத்தியாகும் கருப்பு ரக திராட்சை நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன.சமீப காலமாக கடையநல்லூர் பகுதியில் திராட்சை உற்பத்தி சரிவை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது. திராட்சை தோட்டத்தில் பணி செய்த தொழிலாளர்கள், கூடுதல் சம்பளத்திற்காக மாற்று பணிக்கு சென்று விட்டனர். இதனால் திராட்சை தோட்டத்தில் வேலை பார்க்க ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அதிக கூலி கேட்பதால் தோட்ட உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டது.கருப்பு ரக திராட்சையை பழுக்க வைப்பதற்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதனால் திராட்சை பயிரிடுவதை விவசாயிகள் படிப்படியாக குறைக்க துவங்கினர். இதனால் திராட்சை உற்பத்தி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.கோடைக்காலங்களில் திராட்சைக்கு அதிக விலையும், கிராக்கியும் இருந்தாலும், வறட்சி காரணமாக அதனை பயிர் செய்ய விவசாயிகள் முன்ரவில்லை. பனிக்காலங்களில் பழங்களுக்கு கிராக்கி குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் பழங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் பறிக்காவிட்டால், அவை கொடியிலேயே பழுத்து உதிர்ந்து விடுகின்றன. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.இப்படி பல்வேறு காரணங்களால் திராட்சை பயிர் செய்யப்படுவது குறைந்து கொண்டே வருகிறது. திராட்சை உற்பத்தியில் சாதனை படைத்து வந்த கடையநல்லூர் பகுதியில் தற்போது குறிப்பிட்ட சிலரே திராட்சை பயிர் செய்துள்ளனர்.தற்போது பருவமழை ஓரளவு பெய்துள்ளதால் திராட்சை பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். அதே நேரத்தில் திராட்சை பயிரிட்டால் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கத்திலும் உள்ளனர். கடையநல்லூரில் விளையும் திராட்சை மிகவும் சுவையுள்ளதாக இருக்கும் என்பதால் இவைகளுக்கு நல்ல கிராக்கி உண்டு.இதனை கருத்தில் கொண்டு கடையநல்லூர் பகுதியில் மீண்டும் திராட்சை பயிரிட விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விவசாயம் தொடர்பான உதவி செய்யயும் அரசு அதிகாரிகள் கருணை காட்ட வேண்ரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
See less See more
Nice to hear that kadayannalur occupies 2nd position in grapes cultivation :)
முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

விக்கிரமசிங்கபுரம் : முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இன்று (16ம் தேதி) முதல் வரும் 21ம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று (16ம் தேதி )முதல் வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் பாபநாசத்தில் அம்பை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் காஞ்சனா தலைமையில் நடக்கிறது. வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஒரு குழுவில் 6 பேர் அடங்கிய 25 குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்கள் பாபநாசம் மற்றும் முண்டந்துறை வனச்சரகங்களில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் நடக்க இருப்பதால் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை புலிகள் காப்பக பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
See less See more
செங்கல்தேரி கூவாப்பட்டி ஓடையில் புலியின் கால்தடம் கண்டுபிடிப்பு


களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்தில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. செங்கல்தேரி கூவாப்பட்டி ஓடையில் புலியின் கால்தடம் கண்டு பிடிக்கப்பட்டதாக துணை இயக்குனர் சேகர் தெரிவித்தார்.தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இப்பணி தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் நேற்று துவங்கியது.நெல்லை மாவட்டம் களக்காடு முன்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திலுள்ள களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச்சரகங்களில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.முதல் மூன்று நாட்கள் ஊன் உண்ணிகள் அதாவது புலி, கரடி, செந்நாய், சிறுத்தை போன்ற உயிரினங்களின் கால்தடம், எச்சம் போன்றவைகள் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. களக்காடு வனச்சரகம் செங்கல்தேரி பீட் கூவாப்பட்டி ஓடையில் புலியின் கால் தடம் ஒன்றை கண்டுபிடித்தனர். நாளை (19ம் தேதி) முதல் குளம்பினங்கள் அதாவது மான், யானை, காட்டுபன்றி போன்ற வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கடைசி நாள் தாவர வகை, கழுகுகள் குறித்த சர்வே எடுக்கும் பணி நடக்கிறது.
களக்காடு புலிகள் காப்பகத்தில் நேற்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வனக்குழுவினர் புலியின் கால் தடம் ஒன்றை கணடுபிடித்தனர். இது பற்றி புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் கூறுகையில் களக்காடு வனச்சரகம் செங்கல்தேரி பீட் கூவாப்பட்டி ஓடையில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனக்குழுவினர் புலியின் கால் தடம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். 13 செ.மீ., நீளம் 10 செ.மீ., அகலம் புலியின் கால் தடம் உள்ளது. இது பெரும்பாலும் ஆண் புலியின் கால்தடமாக இருக்கும் இருந்த போதிலும் முழு பரிசோதனைக்கு பின் இது பற்றிய விபரம் தெரியவரும் என்றார்.

களக்காடு புலிகள் காப்பகத்தில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணியில் 19 குழுக்கள் ஈடுபட்டுள்ளது. செங்கல்தேரி பீட்டில் மூன்று குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவில் பாளை., சாராள் தக்கர் கல்லூரி விலங்கியியல் பிரிவு 3ம் ஆண்டு மாணவியர்கள் 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனக்குழுவினர்கள் எப்படி கணக்கெடுக்க வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சியினை களக்காடு ரேஞ்சர் நடராஜன், பாரஸ்டர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் நடத்தினர்.களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த முறை கணக்கெடுப்பின் போது 16 புலிகள் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது எடுக்கும் கணக்கெடுப்பின் முடிவின் போது புலிகள் எண்ணிக்கை கூடியுள்ளதா என்பது குறித்து விபரம் தெரியும்.
See less See more
களக்காட்டில் புதிய பாலம்டவுன் பஞ்., தலைவர் ஆய்வு

களக்காடு : களக்காடு மணிகூண்டு அருகே ரூ.3.50 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணியினை டவுன் பஞ். தலைவர் ராஜன் துவக்கி வைத்தார்.களக்காடு புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு முகப்பில் மணி கூண்டு அருகே ரோடு முகப்பு மிகவும் குறுகலாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிபட்டனர். இதை தொடர்ந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் ரோடு முகப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இப்பணியினை டவுன் பஞ்., தலைவர் ராஜன் துவக்கி வைத்தார். இதே போல் குடிதாங்கி குளம் ரோட்டில் 7.75 லட்சம் செலவில் பேவர் பிளாக் எனப்படும் நடைபாதை கற்கள் பதிக்கும் பணியினை தலைவர் ராஜன் பார்வையிட்டு பணி விரைவாக தரமாக செய்து முடிக்கும் படி அதிகாரிகளை கேட்டு கொண்டார். தலைவருடன் டவுன் பஞ்., அதிகாரிகள், கவுன்சிலர்கள் அப்துல் மஜீத், சவுந்திரபாண்டி, அழகு உட்பட பலர் உடன் சென்றனர்.
See less See more
ரூ.25 லட்சம் மதிப்பில் வாகன காப்பகம் * களக்காட்டில் கனிமொழி எம்.பி., திறப்பு

களக்காடு:களக்காட்டில் கனிமொழி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு டவுன் பஞ்., தலைவர் பி.சி.ராஜன் தலைமை வகித்தார். நகர தி.மு.க., செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.பி.,க்கள் ஜெயதுரை, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, எம்.எல்.ஏ., மைதீன்கான், களக்காடு சேர்மன் ஜார்ஜ் கோசல், முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு ஆகியோர் பேசினர்.

ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்து கனிமொழி எம்.பி.,பேசியதாவது:- கருணாநிதி இரவு பகல் பாராமல் எடுத்த காரியத்தை முடிக்க பாடுபடுவார். அதே போல் களக்காடு டவுன் பஞ்., தலைவர் பி.சி.ராஜனும் செயல்பட்டு கருணாநிதியின் உண்மை தொண்டனாக உள்ளார். களக்காடு மக்களுக்கு குடிநீர் கிடைக்க கூடுதல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர நிதி ஒதுக்கீடு செய்து தருவேன். வரும் பார்லி., தேர்தலில் 40 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நம்மை நம்பியுள்ள கட்சிகளுக்கு கலைஞர் ஒதுக்கும் சீட் தவிர்த்து மீதமுள்ள தொகுதிகள் அனைத்திலும் நின்று வெற்றி பெறுவோம். மற்ற கட்சி போல் வேண்டும் போது கூட்டணி மற்ற நேரத்தில் தூக்கி எறியும் பழக்கம் கலைஞருக்கு கிடையாது.

குடிக்க தண்ணீர் கிடையாது, மின்சாரம் இல்லை, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, யாருக்கும் மருத்துவ வசதி கிடையாது இது தான் அதிமுகவின் மூன்றாம் ஆண்டு சாதனை. மக்களுக்கு பயன்பெறக்கூடிய திட்டங்கள் அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதை அனைத்தையும் அ.தி.மு.க., அரசு முடக்கிவிட்டது. இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டும். பெண்கள் வீதிக்கு வந்து போராடினால் தான் மாற்றம் வரும். நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அநீதியை எதிர்த்து போராட வேண்டும். தி.மு.க., ஆட்சியில் கலைஞர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார். அ.தி.மு.க., அரசு எதையும் நிறைவேற்றவில்லை.


ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நெல்லை மாவட்டத்தில் 38 கொலைகள் நடந்துள்ளது. 20 நாட்களில் மட்டும் 13 கொலைகள் நடந்துள்ளது. இதை பார்க்கும்போது எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது. இதற்கு எல்லாம் வரப்போகும் தேர்தலில் மக்களாகிய நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.


70ம் ஆண்டு தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு ஜனாதிபதி பதவி கிடைக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது கலைஞர் எனது உயரம் எனக்கு தெரியும். தமிழ் மக்களை விட்டு நான் எங்கேயும் செல்ல மாட்டேன் என கூறினார். ஆனால் தற்போது அ.தி.மு.க., பொதுக்குழுவில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்று பிரதமராக அம்மாவை உட்கார வைப்போம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் குடிக்க தண்ணீர் கிடையாது. மின்சாரம் கிடையாது, அம்மா பிரதமரானால் இந்தியா அளவில் குடிநீர் கிடைக்காது. தமிழ்நாடு முதல்வராக இருக்கும் ஜெயலலிதா கோடநாடு, போயஸ் கார்டனில் தான் இருப்பார். இவரை யாராலும் பார்க்க முடியாது. பிரதமரானால் ஜெ.,வெளிநாட்டில் சென்று ஓய்வு எடுக்க தங்கிவிடுவார். இந்திய பாராளுமன்றம் வெளிநாட்டில் செயல்படும் நிலை உருவாகும்.


ஜெ., முதல்வராக இருக்கும்போதே மக்களை சந்திப்பது கிடையாது. அப்படியே வந்தாலும் கண்ணாடி காருக்குள் இருந்து மக்கள் மூச்சே தன் மீது படாதவாறு பேசிவிட்டு செல்வார். ஜெ., ஆட்சியில் எந்த தொழில் வளர்ச்சியும் கிடையாது. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இருண்ட தமிழகத்தை இருளிலிருந்து மீட்க உதய‹ரியனால் மட்டும் தான் முடியும். கலைஞர் உங்களை நம்பியுள்ளார் ஆதரவு தருமாறு பேசினார்.


கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் ஜான்சன்துரை, சித்திக், முத்துகிருஷ்ணன், கருணாகரன், வேலு, கவுன்சிலர்கள் அப்துல் மஜீத், சர்தார் அலி, நாகூர்கனி, ஜின்னா, தபால்துறை தொமுச மாநில தலைவர் நான்குநேரி ஆறுமுகம், கவுன்சிலர் கானாமுத்து, காமராஜ் உட்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

ஜின்னாதுரை நன்றி கூறினார். பின் கனிமொழி எம்.பி., களக்காடு சிதம்பராபுரம் கருணாகரன் இல்லத்திற்கு சென்று கருணாகரன் சகோதரி ஜான்சி, டாக்டர் அருள் ஆகியோர் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
See less See more
what happened to the integrated multilevel parking in junction bus stand? :( :(
முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி இன்று நிறைவு

விக்கிரமசிங்கபுரம்:முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று (22ம் தேதி) முடிவடைகிறது.

பாபநாசம் வனச்சரகப் பகுதியில் புலியின் கால்தடம் பதிவாகியுள்ளது வனத்துறையினரிடம் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 16ம்தேதி துவங்கியது. முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் 5, பாபநாசம் வனச்சரகத்தில் 4, முண்டந்துறை வனச்சரகத்தில் 10, கடையம் வனச்சரகத்தில் 7 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 26 குழுக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டன. இதில் முண்டந்துறை வனச்சரகத்தில் கொடமாடி, மயிலாறு, காரையாறு, பாதர்மலை, கன்னிக்கட்டி கடையம் வனச்சரகத்தில் சிவசைலம், ஆம்பூர், கடையம், பாபநாசம் வனச்சரகத்தில் வடக்கு கோரையார், கோயில்தேரி, ஆலடியூர், எஸ்.எம்.கோயில், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் குதிரைவெட்டி, அப்பர்கோதையாறு பீட்டிலும் கணக்கெடுக்கும் வனக்குழுவினர் தங்கி சுமுார் 15 கி.மீ., சுற்றளவு தூரத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் விலங்குகளின் கால்தடம், எச்சங்கள், தரையில் ஏற்பட்டுள்ள பள்ளம், மரத்தில் உள்ள நகக் கீறல்கள், வனவிலங்குகளின் சப்தம், உறுமல் போன்றவற்றை சேகரித்து வருவதோடு வாட்ச் டவர் மற்றும் நடந்து செல்லும்போது நேரில் பார்த்தவைகளையும் பதிவு செய்து வருகின்றனர். ஜி.பி.எஸ்.என்று அழைக்கப்படும் புவிநிலை நிறுத்தமானி மூலம் இவர்கள் இருக்குமிடத்திலிருந்து வனவிலங்குகள் இருக்கும் தூரத்தையும் கணக்கெடுக்கின்றனர். இவ்வாறு பல்வேறு வழிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை புலிகள் காப்பக கள இயக்குனர் பானர்ஜி மற்றும் அம்பை துணை இயக்குனர் காஞ்சனா ஆகியோர் பார்வையிட்டு வனத்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினர்.
கணக்கெடுப்பின் போது பல இடங்களில் செந்நாய் கூட்டத்தையும், சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகளின் கால்தடங்களையும் பார்த்து பதிவு செய்ததோடு பாபநாசம் வனச்சரகம் கோரையாறு பீட்டில் புலியின் கால்தடத்தை பார்த்து பதிவு செய்தது வனத்துறையினரிடம் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சுமார் 7 நாட்கள் நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று (22ம் தேதி) முடிவடையும் நிலையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் நாளை (23ம் தேதி) புலிகள் காப்பக கள இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
See less See more
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நீராவி வெளியேற்றும் சோதனை

திருநெல்வேலி:""கூடங்குளம் அணுமின் நிலையத்தில், "டர்பைனுக்கு' செல்லும் நீராவியை வெளியேற்றும் சோதனை, இந்த வாரத்தில் நடக்க உள்ளது,'' என, அணுமின்நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின், முதலாவது அணு உலையில், மின்உற்பத்தி துவங்கிய பின், அவ்வப்போது நிறுத்தி, ஆய்வு நடக்கிறது. நேற்று காலை, 425 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மதியம் சிறிது நேரம்,ஆய்வுக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டு, பின், மீண்டும் துவங்கியது.இதுதொடர்பாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் அறிக்கை: கூடங்குளம் முதலாவது உலையில், தற்போது 425 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி நடக்கிறது. உற்பத்தி துவங்கியதில் இருந்து இதுவரை, மின்தொகுப்புடன் இணைக்கப்பட்ட, 1035 மணி
நேரத்தில், மொத்தம் 35 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, தொகுப்பிற்கு வழங்கி உள்ளோம்.
முதலாவது அணுஉலை திருப்தியாக செயல்படுகிறது. உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி பணிகளை தொடர்கிறோம். அதில் ஒரு கட்டமாக, மின்உற்பத்திக்கான, "டர்பைனுக்கு' செல்லும் நீராவியை வெளியேற்றும் சோதனையை, இந்த வார இறுதியில் நடத்த உள்ளோம்.நீராவி, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு வெளியேற்றப்படும்; வெளியேறும் போது
ஏற்படும் சத்தத்தின் அளவு, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது; இதனால், பொதுமக்கள், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது."டர்பைனுக்கு' செல்லும் நீராவியை வெளியேற்றும் போது, உற்பத்தி சிறிதுநேரம் நிறுத்தப்படும். இதற்கு, பெங்களூருவில் உள்ள மத்திய தென்மண்டல மின் வினியோக மையத்தின் அனுமதியை கேட்டுள்ளோம்; அனுமதி கிடைத்த பிறகே, நீராவி வெளியேற்றும் பணி மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், நீராவி வெளியேற்றும் போது, சப்தம் கேட்டதால் பீதி ஏற்பட்டது;தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. எனவே, "டர்பைன்'
நீராவியை வெளியேற்றும் பணி, வழக்கமானதுதான்; வெளியாகும் போது, ஒலியின் அளவு அதிகமாக இருப்பதால், அணுமின் நிலையத்தினர், இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
See less See more
தமிழகத்திலும் 'ஆம் ஆத்மி' போட்டி : நெல்லையில் பிரசாந்த் பூஷன் பேட்டி

திருநெல்வேலி: பார்லிமென்ட் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, தமிழகத்தில் போட்டியிடும்,'' என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு தலைவர் பிரசாந்த் பூஷனுக்கு, கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவுக்கு வந்த பிரசாந்த் பூஷன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் இடிந்தகரைக்கு வந்து, போராட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: காங்., ஆதரவுடன் டில்லியில் ஆட்சி அமைத்துள்ளோம். அவர்கள் எங்களது ஆட்சிக்கு எதிராக முடிவு எடுப்பதற்கு முன், மக்களுக்கு நல்லது செய்வோம். மக்களுக்கு அடிப்படையான முற்போக்கு அரசியல் மாற்றங்களை கொண்டு வருவோம். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் உட்ப ட அனைத்து மாநிலங்களிலும், அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம், என்றார்.
See less See more
Time for new government. Hope aam aathmi will hear our demands :) :)
Expecting more movies to be shoot in and around tirunelveli. :)
தொல்லையாகும் நெல்லை தொகுதி : போட்டியிட கதிகலங்கும் கட்சிகள்

திருநெல்வேலி : திருநெல்வேலி தொகுதியை ஒவ்வொரு கட்சியுமே தங்களுக்கு வேண்டாம் என கூட்டணிகட்சிகளுக்கு தாரை வார்க்கும் நிலையில் தொல்லை தொகுதியாக மாறிவருகிறது. திருநெல்வேலி பார்லிமென்ட் தொகுதி எப்போதுமே தி.மு.க.,அ.தி.மு.க.,என திராவிட கட்சிகளின்கோட்டையாகும். 1952, 1957 என இரண்டு முறை பி.டி.தாணுப்பிள்ளை காங்கிரஸ் சார்பில் எம்.பி.,ஆனார். 1962க்கு பிறகு நெல்லை தொகுதியை காங்கிரஸ் எட்டிப்பார்த்ததே இல்லை. 1971ல் இந்திய கம்யூ.,சார்பில் முருகானந்தம் வெற்றிபெற்றுள்ளார்.
அதிமுக கோட்டை: இரண்டு முறை தி.மு.க.,வும், ஆறு முறை அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க.,வின் கோட்டையான நெல்லையில் 2004 , 2009 என அடுத்தடுத்து இரண்டுமுறை அ.தி.மு.க.,தோல்வியை தழுவியது.காரணம் இரண்டுமுறையும் வெற்றிபெற்ற காங்கிரஸ், தி.மு.க.,வின் கூட்டணியோடு களம் இறங்கியது.அ.தி.மு.க.,சார்பில் திறமையான வேட்பாளர் தேர்வு செய்யப்படாததுதான். இந்த முறை நெல்லை தொகுதியில் அ.தி.மு.க.,நிச்சயம் போட்டியிடும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் உள்ளனர். இருப்பினும் இன்னமும் நல்ல வேட்பாளர்கள் சிக்கவில்லை. ஆறு தொகுதிகள்:திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளை கொண்டதாகும். இப்போதைக்கு பாளையங்கோட்டையில் தி.மு.க.,வும் ராதாபுரத்தில் தே.மு.தி.க.,வும் வெற்றிபெற்ற தொகுதிகளாகும். கடந்த பத்து தேர்தல்களாக நாடார் வகுப்பினரேமுக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தற்போதும் நாடார் மக்களின் ஓட்டுக்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் சீட் பெறுவதில் போட்டி நிலவுகிறது. தி.மு.க., இந்த முறை நெல்லையில்கட்டாயம் போட்டியிட வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். திமுக கோஷ்டி பூசல்:1998ல் தி.மு.க.,சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார், தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம்
அப்போதைய தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியின் உள்குத்து வேலைதான் என பரபரப்பாக பேசப்பட்டது. எனவே அதன் பின்னர் 1999ல் நடந்த தேர்தலில் பெரியசாமியின் மகள் கீதாஜீவனை பழிவாங்கும் விதமாக தோற்கடிக்கப்பட்டார். எனவே தி.மு.க.,வில் எப்போதும் நிலவும் கோஷ்டி மோதல்களுக்கு இப்போதும் குறைவில்லை. ஒரு காலத்தில் கருணாநிதி, நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்பார். ஆனால் நெல்லையிலும் கருப்பசாமிபாண்டியன், ஆவுடையப்பன், மைதீன்கான், அப்பாவு என நிலவும் கோஷ்டி பூசல்களால்
தி.மு.க.,தோழமை கட்சிகளுக்கு தொகுதியை கை கழுவுமோ என்ற பீதி உள்ளது நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த விஜிலா எம்.பி.,யாவதால்,
நெல்லை மேயர் பதவியை தற்போது தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். நெல்லை மாநகராட்சியை உள்ளடக்கிய நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய இரண்டு சட்டசபை
தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள பிள்ளைமார், யாதவர், இஸ்லாமியர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். உள்ளாட்சி அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றமும் பார்லி.,தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு எதிரான அலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தி.மு.க.,கூட்டணி பலத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ்க்கு இந்த முறை நிஜமாகவே தொல்லைதான். தி.மு.க., தே.மு.தி.க.,உள்ளிட்ட பலமான கூட்டணி அமையாவிட்டால் எங்களுக்கு சீட்டே வேண்டாம் என இப்போதே காங்கிரசார் ஓட்டம் பிடிக்கின்றனர். வழக்கம்போல கம்யூ.,மதிமுக.,பாமக போன்ற கட்சிகள் எட்டி கூட பார்க்கமுடியாத தொகுதி. பாரதிய ஜனதாவும் தென்காசியில் போட்டியிட முயற்சிப்பதால் நெல்லையை வேண்டாம் என்பார்கள். மொத்தத்தில் தி.மு.க.,அ.தி.மு.க.,தே.மு.தி.க., கட்சிகள் மட்டுமே போட்டியிட சாத்யமான தொகுதியாக இருப்பினும் நெல்லை இந்த முறை தொல்லை..தொல்லைதான்..!
See less See more
harmandhar singh :) I still remember this guy. he was an awesome commissioner. he was very strict and maintained cleanliness throughout the city.
He frequently visits new bus stand and spot fine will be issued if it does not maintained properly.
Same news in tamil

அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி


நெல்லை,

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கியது.

அறிவியல் கண்காட்சி

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் சேசு சபை நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி போட்டி நடைபெறுகிறது.

இந்த கண்காட்சி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 35 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அரங்குகள் அமைத்து இருந்தார்கள். தாங்கள் உருவாக்கிய படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

தீவிபத்தின் போது தானாகவே தீயை அணைக்கும் ரோபோ மற்றும் மின்சாதன பொருட்கள், இயந்திர மயமாக்கலால் காணாமல் போன பாரம்பரிய பொருட்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

புதிய சிந்தனைகள்

கண்காட்சியை விஜிலா சத்தியானந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். நெல்லை அறிவியல் மைய அதிகாரி சீதாராம் வாழ்த்தி பேசினார். இஸ்ரோ மூத்த விஞ்சானி நெல்லை எஸ்.முத்து பேசுகையில், ‘‘மாணவர் பருவத்திலேயே அறிவியல் சிந்தனை ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஒரு துறை பற்றி மட்டும் கற்றுக் கொள்வதை விடுத்து, பிற துறைகள் சார்ந்த அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் புதிய சிந்தனைகள் பிறக்கும். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்’’ என்றார்.

கல்லூரி செயலாளர் தாஸ், முதல்வர் கில்பர்ட் கமிலஸ், கலைமனைகளின் அதிபர் டேனிஸ் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் கூடங்குளம் பொதுமக்கள் விழிப்புணர்வு குழு விஞ்ஞானி பண்டாரம் பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கண்காட்சி போட்டி இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
See less See more
1 - 20 of 879 Posts
Top