Same news.
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி
நெல்லை
நெல்லையில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி நடத்தினார்கள்.
பேரணி
தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர் பிரசார இயக்கம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து நெல்லை வரை பேரணியை தொடங்கினார்கள். பேரணிக்கு கட்சியின் மாநில தலைவர் தெகலன் பாக்கவி தலைமை தாங்கினார்.
பேரணி நேற்று பத்தமடையில் இருந்து மேலப்பாளையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சந்தை முக்கு, வீரமாணிக்கபுரம் ரவுண்டானா, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி வழியாக பாளையங்கோட்டை மார்க்கெட்டை அடைந்தது. பேரணியில் மாநில பொதுச் செயலாளர் உஸ்மான்கான் மற்றும் ஏராளமானோர் சீருடையுடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் வழி எங்கும் தாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.
பொதுக்கூட்டம்
பேரணி முடிவில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமை தாங்கினார். ல் மாநில தலைவர் தெகலன் பாக்கவி பேசுகையில், ‘‘தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரங்களில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புளாலும், செங்கல் சூளைகளாலும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும். ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவு நீரை தடுக்க வேண்டும். இல்லை என்றால் கழிவு நீரை சுத்திகரித்து விட வேண்டும். தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரை கூடங்குளம் அணுஉலைக்கு கொண்டு செல்லக்கூடாது. கங்கைகொண்டான் தனியார் குளிர்பான ஆலைக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், செயற்குழு உறுப்பினர் உஸ்மான்கான் மற்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி
நெல்லை
நெல்லையில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணி நடத்தினார்கள்.
பேரணி
தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர் பிரசார இயக்கம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து நெல்லை வரை பேரணியை தொடங்கினார்கள். பேரணிக்கு கட்சியின் மாநில தலைவர் தெகலன் பாக்கவி தலைமை தாங்கினார்.
பேரணி நேற்று பத்தமடையில் இருந்து மேலப்பாளையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சந்தை முக்கு, வீரமாணிக்கபுரம் ரவுண்டானா, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி வழியாக பாளையங்கோட்டை மார்க்கெட்டை அடைந்தது. பேரணியில் மாநில பொதுச் செயலாளர் உஸ்மான்கான் மற்றும் ஏராளமானோர் சீருடையுடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் வழி எங்கும் தாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.
பொதுக்கூட்டம்
பேரணி முடிவில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமை தாங்கினார். ல் மாநில தலைவர் தெகலன் பாக்கவி பேசுகையில், ‘‘தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரங்களில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புளாலும், செங்கல் சூளைகளாலும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும். ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவு நீரை தடுக்க வேண்டும். இல்லை என்றால் கழிவு நீரை சுத்திகரித்து விட வேண்டும். தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரை கூடங்குளம் அணுஉலைக்கு கொண்டு செல்லக்கூடாது. கங்கைகொண்டான் தனியார் குளிர்பான ஆலைக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், செயற்குழு உறுப்பினர் உஸ்மான்கான் மற்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.