SkyscraperCity Forum banner

Tirunelveli- History, Temples,Tourism & Entertainment

78344 Views 578 Replies 21 Participants Last post by  JOHNSON KENNADY
Tirunelveli was being the headquarters of Pandiyanadu and one of the temple city in Tamilandu.

Tirunelveli Slang language is the famous and tamil slang In tamilnadu..

Tamil language is originated from Pothigai hills in Tirunelveli district. so we can call Tirunelveli is the native place of tamil language..

Tirunelveli district having five lands.. so far as no districts having this proudness

Lets post the History, Temple tourism and eco tourism related news.
1 - 20 of 579 Posts
Nellai tamil is Purest Tamil Language





See less See more
3
Nellaiappar Temple



The temple complex consist of two huge temples, one for Lord Shiva (Nellaiappar temple) and the other for his consort Parvathi (Kanthimathi Ammai temple). The former temple is also called as 'Swamy Venunathar', 'Nelveli Nathar', 'Chaleevadeesar' and later by the names 'Vadivudaya Ammai' and 'Kamakottamudaya Naachiyaar'. These two temples are linked by a big terraced hall namely Sangili Mandapam that has life sized sculptures adoring the pillars. The main deity of Kanthimathi Nellaiyappar Temple is a 'Suyambu Lingam' or a Shiva Lingam which erupted from underneath the earth.
The Nandi mandapam has a fairly big statue of Nandi (the bull God), similar to those at Tanjore and Rameswaram . The unique feature of the temple is the 'Mani manadapam' located near the nandi mandapam with two giant pillars carved out of a single stone and each one is having 48 sub pillars which produce musical notes when struck. Tamil poet Nellai M.S. Shankar says that the pillars here are a combination of the Shruti Gana Laya types. Other mandapams in the temple include Oonjal Mandapam and the 1000 pillared hall. The 1000 pillared hall is famous for the celestial wedding of Kanthimathi Ammai with Nellaiyappar which is celebrated every year in the Tamil month of Aippasi corresponding to October-November.
See less See more
Nellaiappar temple

See less See more
Golden Car

Also, a Golden Temple car (First Inaugural run of Nellaiappar Temple Golden Car is November 2, 2009) will run during important festivals like Thirukalyanam, Kaarthigai, Aaruthra Festival etc. During Thaipoosam festival in Thai, Lord Shiva and Parvathy are taken to the banks of Thamirabarani river in Tirunelveli junction called "Thaipoosa mandapam". Special rituals are undertaken there and the Lord return to the temple at night.

See less See more
திருநெல்வேலி மாநகராட்சி தென் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தெற்குப் பகுதி மாவட்டமான திருநெல்வேலியின் நகர் பகுதியாகும். இது 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருச்சி, சேலம் ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை.


திருநெல்வேலி மாநகராட்சி பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். இந்த மாவட்டத்தில் தான் பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சி நாதன் மற்றும் விடுதலை புரட்சியாளர்களான வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா மற்றும் பலரின் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.


டிவிஎஸ் சுந்தரம், சிம்சன், ஏசான், இந்தியா சிமென்ட்ஸ்பல தொழிலதிபர்களும் இம்மாவட்டத்தையே பிறப்பிடமாக கொண்டுள்ளனர்.திருநெல்வேலி அல்வாத் தயாரிப்புக்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன் இது அல்வா நகரம்:cheers: என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.


இம்மாநகராட்சி மூன்றுப் பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவது திருநெல்வேலி, பாளயங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.
See less See more
  • Like
Reactions: 1
How tirunelveli was named?

பெயர்க்காரணம்

நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளிலேயே 'திருநெல்வேலி' என அழைக்கப்படுகிறது.

வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்ச நல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள் வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்தெரிய வந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணர முடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதை பொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப் பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது. சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் சூறை யிட்டான்.

பாண்டியர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாக காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ் நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன.

அவற்றில் குறிப்பிட்டத்தன : நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன் கோட்டை, நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம். பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலைப்பன் பிள்ளையும் ஆவர்.

பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு

சேரன் மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீலவ பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பெளத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன. மொகலாயர் காலத்தில் கட்டப் பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது.

திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன் கோட்டையில் காணலாம். வீர கேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
See less See more
Features

காட்டு வளம்

காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.

நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

காட்டு விலங்குகள்

செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.

பறவைகள்

மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.

நிலவளம்

திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.

தருவைகள்

பாலைவன ஊற்றுகளை போல இம்மணற் குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.
See less See more
Tourism place

சுற்றுலா தலங்கள்

குற்றாலம், பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, கிருஷ்ணாபுரம், திருக்குறுங்குடி, முண்டந்துறை புலிகள் சரணாலயம், களக்காடு புலிகள் சரணாலயம், கூந்தக் குளம் பறவைகள் சரணாலயம், அரியகுளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை நெல்லை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலாத் தலங்களாகும். .

பாபநாசம் நீர்வீழ்ச்சி

அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.

குற்றாலம்

திருக்குற்றாலம்

தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்ற காலமாகும். குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது.

தேன் அருவி

தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று.

செண்பகாதேவி அருவி

தேனருவி ஒன்றரைக்கல் வரையிலும் மலையில் சிற்றாறாக ஓடி, பிறகு செண்பக மரங்கள் நிறைந்த காட்டு வழியே பாய்ந்து, முப்பது அடி உயரமுள்ள அருவியாக விழுகிறது. இதனால் செண்பக அருவி என்று பெயர் பெற்றுள்ளது.

பொங்குமாகடல்

செண்பகாதேவி அருவியிலிருந்து 2 கல்தூரம் பாய்ந்து, இருநூற்று எண்பது அடி உயரமுள்ள அருவியாகக் குதிக்கிறது. இந்த இடத்தில் ஒரே வீழ்ச்சியாக இல்லாமல் பாறை மேல் விழுந்து பொங்கி விரிந்து கீழ்நோக்கி விழுகிறது. இப்படி பொங்கி எழுவதால் இதைப் பொங்குமாகடல் என்று கூறுகிறார்கள்.

புலி அருவி

குற்றாலத்துக்குக் கிழக்கே முக்கால் மைல் தொலைவில் புலி அருவி இருக்கிறது. புலிகள் வந்து நீர் அருந்துவதால் இப்பெயர் பெற்றது.

ஐந்தருவி

சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும். செண்பக அருவிக்கு அருகில் செண்பக தேவி அம்மன் கோயில் இருக்கிறது. சாரல் காலத்தில் வெயில் மழை தூறுவதும் மாறி மாறி நடக்கும். நீர்த்திவலைகள் துள்ளித் தெறிப்பது சிறு மழைபோல் தோன்றும். பெரிய அருவியில் சாரல் காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். குற்றாலநாதர் கோயிலுக்குத் தென்புறம் குறும்பலா இருக்கின்றது.

ஐந்தருவிக்குப் போகும் வழியில் கூத்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சித்திர சபை என்னும் சிறிய கோவில் ஒன்றும் உள்ளது. அருவி விழுகின்ற ஒலி நெடுந் தொலைவு வரை கேட்கும். உடலில் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு நின்றால் சீயக்காய் தேய்க்காமலே எண்ணெய் போய் விடும். குற்றாலத்தில்-இரவிலும் பகலிலும் அருவியைப் பார்ப்பது அழகுதான்.
See less See more
Place to be visit in Tirunelveli

திருநெல்வேலி மாவட்டத்தில் காணவேண்டிய முக்கியமான வழிபாட்டு தலங்கள்


திருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லைப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில்; சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணன்-கோமதி அம்மன் திருக்கோவில்; பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவில்; பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில்; நாங்குநேரி வானுமாமலை கோயில்; உவரியில் சுயம்புலிங்க சுவாமி கோவில்; தென்காசி-காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை சைவ-வைணவத் தலங்கள் ஆகும்.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறித்துவ தலங்கள்: திருமலைப்புரம்; டோனாவூர்; திசையன் விளை; இடையன் குடி, உவரி, வடக்கன்குளம், பாளையங்கோட்டை


இஸ்லாமியர்களுக்கு கோயில்பத்து, பொட்டல் புத்தூர் தர்கா, கீழ்க்கடைய நல்லூர் பள்ளிவாசல், தென்காசி காட்டுபாவா பள்ளி வாசல், புளியங்குடி மசூதி, மேலச் செவல் நைனா முகம்மது பள்ளிவாசல் போன்றவை முக்கியமான வழி பாட்டிடங்களாகும்.
See less See more
Important place in Tirunelveli

சங்கரன்கோவில்

சங்கர நயினார் கோவிலுக்கு வடக்கே ஒரு பஞ்சாலை இயங்குகிறது. இங்கு ஒரு வனஸ்பதி தொழிற்சாலையும் உள்ளது. சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் பல தீப்பெட்டி தொழிற்சாலைகளும், மூன்று மூட்டைபூச்சி ஒழிப்பு மருந்து செய்யும் நிறுவனங்களும், சோப்பு செய்யும் தொழிலகங்களும், பருத்தி அறைக்கும் ஆலைகளும் இங்கு இயங்குகின்றன. வாடிக்கோட்டை கிராமத்தில் ஒரு பஞ்சாலை உள்ளது.

இவ் வட்டம் மழை வளம் குறைந்தது. இங்கு சித்திரை பத்துக்கு மேல் ஆவணி, புரட்டாசி முடிய மேய்க்காற்று வீசும். சங்கர நாயனார் கோவிலில் சிவனும், பெருமாளும் 'சங்கர நாராயண' வடிவத்தில் வழிபடப்படுகின்றனர். இங்கு ஆடி மாதத்தில் உற்சவத்தின் போது 'மாட்டுத் தாவணி' நடைபெறும் சங்கர நாராயணார் கோவில் கி.பி.1022 இல் கட்டப்பபட்டது. இக்கோவில் கோபுரம் 125 அடி உயரமானது. புலித்தேவரால் அமைக்கப்பட்ட உட்கோவில் மர வேலைபாட்டைக் காணலாம்.

நாங்குனேரி

நெல்லை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ளது. நல்ல மழை பெறும் வட்டம். தென்கலை வைணவர்களுக்கு முக்கியமான 'வானமாமலை மடம்' இங்குள்ளது. திருநெல்வேலி யிலிருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் 28 கி.மீ தொலைவில் உள்ளது. நம்மாழ்வாரால் பாடல்பெற்றது. தங்கத்தால் இழைக்கப்பட்ட மண்டபம், தூண்கள், நகைகள் காணத் தக்கவை.

செங்கோட்டை

வட்டத் தலைநகர். மேற்கு தொடர்ச்சி மலைக் காணப்படுகிறது. தமிழ் நாட்டிலேயே சிறிய வட்டம் 194 ச.கி.மீ; இங்கு மழை அதிகம் பெறுகிறது. ஜூலை முதல் நவம்பர் வரை நிலவும் காலநிலை உடல் நலத்திற்கு ஏற்றது. இவ்வட்டத்தில் மோட்டை அணை, ஸ்ரீமூலபேரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முக்கியமானத் தொழில் வேளாண்மையே ஆகும். சொந்த தேவைக்கு ஆனைக் கொம்பன் நெல்லையும், விற்பனைக்குச் சிறுமணிநெல்லையும் பயிரிடுகின்றனர்.

முதல் போகத்தில் நெல்லுடன் சோளம், உளுந்தும் இரண்டாவது போகத்தில் மிளகாய், வெங்காயம் ஆகியவையும் பயிராகின்றன. மண்பாண்டம் செய்வதும், பிரம்புக் கூடைகள் தயாரிப்பதும் இங்கு சிறந்த முறையில் நடைபெறுகின்றன. கட்டளைமலைக் குடியிருப்பில் பாலராமவர்மா பஞ்சாலை இருக்கிறது.

செங்கோட்டை 'மண்வெட்டி' புகழ்பெற்றது. 'தோசைக்கல்' இங்கு செய்யப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் சந்தை கூடுகிறது. பேல் கட்டப் பயன்படும் மூங்கில் பட்டைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தென்காசி

வட்டத் தலைநகர். ஏறத்தாழ 1030 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. மழையளவு மிகுதி யாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இதன் தொடர்ச்சியான மலைகளும், குன்றுகளும், பாறைகளும் இவ்வட்டமெங்கும் தென்படுகின்றன. தென்காசி வட்டத்தில்தான் குற்றாலம் அமைந்துள்ளது. பொருநையும், சிற்றுறும் பாசன வசதிக்கு உதவுகின்றன. அருவியும், சாரலும் இவ்வட்டத்திற்கு கிடைத்த நன்கொடைகள்.

கி.பி. 1445 இல் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட காசி விசுவநாதர் கோவில் இங்குண்டு. பத்துக் கைககள் கொண்ட நடராசர் சிலையும், 16 கைகள் கொண்ட திருஉருவமும் இக்கோயிலில் உண்டு. இக்கோவிலில் நுண்ணிய வேலைபாடு அதிகம். இங்கு ஐப்பசி, மாசி பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வேளாண்மையும், நெசவுத் தொழிலும் நன்கு வளர்ந்து வருகின்றன. பட்டுப்பூச்சி வளர்க்கும் பண்ணை உள்ளது. சாயத்தொழிலும், நல்லெண்ணை வணிகமும், மரம் அறுக்கும் தொழிலும் நடை பெறுகின்றன. இங்குள்ள தோட்டங்களில் ரஸ்தாளி வாழப்பழம் மிகுதியாக விளைகிறது. மாம்பழ ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றும் செயல்படுகிறது.

அம்பா சமுத்திரம்

வட்டத் தலைநகர். பொதிகை மலையும், பொருநையாறும் அமைந்த வளமான ஊர். இவ்வட்டத்தின் பரப்பளவு 1280 ச.கி.மீ இரு பருவக்காற்றாலும் மழை பெறுகிறது. சில சமயம் 1500 மி.மீ. வரை பெய்வதுண்டு. இம்மாவட்டத்தின் ஆறுகள் அனைத்தும் இந்த வட்டத்தில் தான் தோன்றுகின்றன. இவ்வட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நகர அமைப்பு சிறப்பானது. இவ்வூர் செங்கோட்டை-திருநெல்வேலி இரயில் பாதையில் உள்ளது. இங்கு கல்வி, மருத்துவம், வட்ட அலுவலகங்கள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முதலியன உள்ளன.

அம்பாசமுத்திரம் 'அம்பை' என அழைக்கப்படுகிறது. இங்கு சீரான காலநிலை நிலவுவதால் உடல் நலத்திற்கு ஏற்ற ஊர். நெசவுக்கு பெயர்பெற்றது. இங்கு நெல் விளைச்சலும் மிகுதி. கேரளாவிற்கு நெல் ஏற்றுமதியாகிறது. மரவியாபாரம் சிறப்பான தொழில். குழந்தை விளையாட்டுப் பொருள்கள் செய்யப்படுகின்றன. கல்வி வளர்ச்சியில் இவ்வூர் முன்னணி வகிக்கிறது.

திருநெல்வேலி

மாவட்டத் தலைநகர் சுமார் 850 ச.கி.மீ பரப்பளவுள்ளது. மூன்று கால்வாய்களிலிருந்து நீர் பெறுகிறது. மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இந்நகர் வழியே செல்கிறது. புகைவண்டி சந்திப்பு நிலையமாக உள்ளது. மாவட்டத் தலைமை அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், கல்வி, மருத்துவம் போன்றவைகள் அமைந் துள்ளன. எல்லாவகையான பொருட்களுக்கும் சிறந்த சந்தையாக இந்நகரம் செயல் படுகிறது.

இங்குள்ள நெல்லையப்பர் கோவில் புகழ்பெற்றது. ஐவகை மன்றங்களில் இங்குள்ளது செம்பு மன்றம். நடுவில் உள்ள மணி மண்டபத்தில பெருங்கல்தூண் உள்ளன. ஒவ் வொன்றும் தனித்தனிச் சுரம் எழுப்பும் தன்மை உடையன. இங்கு வெள்ளை நந்தி உள்ளது. இக்கோவிலில் நுட்பமான வேலைகளைக் காணலாம். இறைவன் 'வேய்முத்த நாதன்'. அம்மை : காந்திமதியம்மை.

இராதாபுரம்

வட்டத் தலைநகர் 'ராஜராஜபுரம்' என்பதே ராதாபுரமாயிற்று. இதன் பரப்பளவு 1563 ச.கி.மீ. இப்பகுதிகளில் மணற்காடு மிகுதி. பொதி மாட்டின் மீதே பொருள்கள் கொண்டு சொல்லப்படுவது இன்றும் இங்கு வழக்கம். இராதாபுரம் சிவன் கோவில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. இப்படி சேரும் மஞ்சளை ஏலம் போடுவது வழக்கம்.

பாளையங்கோட்டை

நாயக்கன் காலத்தில் படைத்தலைவராக விளங்கிய அரியநாத முதலியார் கட்டிய கோட்டையில் பாளையங்கள் (படை) தங்கி இருந்தததால் இவ்வூர் பாளையங்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் நிறைய காணப்படுவதால் சின்ன ஆக்ஸ்போட் என்றும் அழைக்கப்படுகிறது. சேசு சபையினர் நடத்தும் புனித சவேரியார் கல்லூரி புகழ் பெற்றதாகும். இங்கு நிறைய கிருத்துவக் கோயில்கள் உள்ளன. இங்கிலீஸ் சர்ச், பிரான்சிஸ் தேவாலயம், செயின்ட் அந்தோணி ஆப் பாதுரா முதலியவை முக்கியமானவை. பாளையங்கோட்டையும், திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாகும்.

சீவலப்பேரி

இங்கு சிற்றாறு, கயத்தாறு, பொருநை என்ற மூவாறுகளும் கூடுவதால் முக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை, ஆவணி மாதங்களில் மாட்டுச் சந்தை நடைபெறும்.

தச்சநல்லூர்

திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ வடக்கே உள்ளது. பித்தளைப் பாத்திரத் தொழில் முக்கியமானது. இரண்டு நூலாலைகளும் மின்சார மோட்டார் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற் கூடமும் சர்க்கரை ஆலையும் இங்கு உள்ளன.

சிவசைலம்

இங்கு ஒளவை ஆஸ்ரமமும், லட்சுமி ஆதார ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் உள்ளன.

சங்கர் நகர்

இந்தியா சிமெண்ட் தொழிற்சாலையும், தொழில் கல்லூரியும் உள்ளன. மத்தளம் பாறை : தென்காசியிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. மாம்பழ வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது.

பண்பொழி

இதன் பெயர் பைம்பொழில். தென்காசிக்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை அழகுடன் செறிந்த காடுகளைக் கொண்டது. சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் உள்ளது. சித்த வைத்திய மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன. தேங்காய் வியாபாரத்திற்கு ஏற்ற இடம். இக்குன்றின் மீது முருகனுக்கு கோவில் உளளது. 600 படிகள் ஏறிச் சென்று முருகனைத் தரிசிக்கலாம்.

வடகரை

தென்காசியிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. நெல், தென்னைக்குப் பெயர் பெற்றது. பீடித்தொழில் இங்கு குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது.

காரையிருப்பு

அரசாங்க விதைப்பண்ணை உள்ளது.

கடையம்

தென்காசியிலிருந்து 15 கி.மீ தொலைவில் ஜம்பு நதிக்கரையில் இருக்கிறது. கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர் இது. திங்கள் தோறும் சந்தை கூடுகிறது. பன்னீர் வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. ரோஜாப்பூ, தாழம்பூ, நார்த்தம் பழம் முதலியவை வெளியூர்களுக்குச் செல்கிறது.

கடைய நல்லூர்

கடைய நல்லூர் 3 பகுதிகளைக் கொண்டது. மேல், கீழ்கடைய நல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் என்பதே அது. இங்கு வியாழக் கிழமை சந்தை. முக்கியத் தொழில் நெசவு. துணிகளுக்கு பளபளப்பேற்றும் காலண்டரிங் ஆலை இங்கு உள்ளது.

கோட்டை மலை

வாசுதேவ நல்லூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றுலாப்பயணத்திற்கு ஏற்ற இடம். இங்குள்ள காடுகளில் மூங்கிலும் பிரம்பும் அதிகம்.

தலைவன் கோட்டை

முள்ளிக் குளத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு முக்கிய விளை பொருள் தக்காளி, வெண்டைக்காய்.

திருமாலபுரம்

சுற்றுலாத் தலம். கடைய நல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ளது. முற்கால பாண்டியர்கள் அமைத்த குடை வரைக் கோயிலில் பாண்டியர் கால ஓவியங்கள் உள்ளன. 45மீ உயரமுள்ள இம்மலையின் உச்சியில் ஊற்றும் கத்தோலிக்கத் கோயிலும் உண்டு.

புளியங்குடி

பாம்புக் கோயில் இரயிலடியிலிருந்து 5கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு கைத்தறி வேட்டி சிறந்த பெயரைப் பெற்றுள்ளது. கருங்கண்ணி பருத்தி விளைச்சல் அதிகம்.

சேரன் மாதேவி

திருநெல்வேலியிலிருந்து 26கி.மீ தொலைவில் உள்ளது. பழைய கோவில் உண்டு. இவ்வூரில் நெசவுத் தொழில், மண்பாண்டத் தொழில், கொழுந்து மலையில் மூலிகை எடுக்கும் தொழில், ஓடு செய்யும் தொழில், உரத்தொழில் இவற்றுடன் வேளாண்மையும் சிறந்து விளங்குகிறது.

குருவிக்குளம்

இங்கு பருத்தி, கம்பு, வாழை ஆகியவை முக்கியமானவை. கதர் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. குயவர், கம்மார் கூட்டுறவு முறையில் சிறந்த பயனைப் பெற்றுள்ளனர்.

வன்னிக்கோநேந்தல்

பழத் தோட்டங்கள் அதிகம். குறிப்பாக எலுமிச்சை. வாசுதேவ நல்லூர் : புளியங்குடிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. புலித்தேவரின் கோட்டை இருந்து அழிவுற்றது. ஊரருகே அடர்த்தியான காடு இருக்கிறது.

சிவகிரி

குற்றாலம் செல்லும் சாலையில் உள்ளது. நெல்விளையும் வளமான ஊர். 'குட்டி மலையாளம்' என்று அழைப்பார்கள். இங்கு மாம்பழ விளைச்சல் அதிகம். சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ளது. பீடித்தொழில், லித்தோ அச்சகங்கள் உள்ளன. 'முக்கூடற்பள்ளு' என்ற புகழ்பெற்ற பள்ளு இலக்கியம் இவ்வூரைப் பற்றிப் பேசுகிறது.

செண்பகராமன் நல்லூர்

நாங்குநேரிக்குக் கிழக்கே ஆறு கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் வெளிப் பிரகாரத்தின் வடக்கு வரிசையில், வடக்குத் தூணில் இரு துவாரங்கள் உள்ளன. ஒன்றில் ஊதினால் எக்காள ஒலியும், மற்றொன்றில் சங்கொலியும் கேட்கும் வண்ணம் செய்துள்ளனர்.

கருவேலங்குளம்

களக்காட்டிலிருந்து 1 1/2 கி.மீ தொலைவிலுள்ளது. புகழ்பெற்ற நடராசர் உருவம் இக்கோயில் உள்ளது. ஏழிசையும் ஒலிக்கும் தூண்கள் இங்குண்டு. மகாமண்டபத்தில் உள்ள கனமற்ற விநாயகரைத் தூக்கினால் கீழே ஓர் அறையைக் காணலாம்.

பிரம்ம தேசம்

ஊரின் நடுவில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்குக் கல்லினால் அமைந்த கூரையும், நான்கு கண்ணிகளுடன் கூடிய கற்சங்கிலியில் தொங்கும் கல்மணியும், ஒரு பாதி யானையாகவும், ஒரு பாதி சிங்கமாகவும் உள்ள பெரிய யாளியின் வாயில் உருளும் கல்லுருண்டை வெளியே எடுக்கமுடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரு குரங்குகளின் உருவங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.

கோயில் பத்து

சிவன் கோயிலின் கிழக்கே நின்று பார்த்தால் சுவரில் ஒரு கதவு தெரியும். அதைத் தள்ளி விட்டு அதனுள் பலர் நின்று கொள்ள முடியும்.
See less See more
Notable People in Tirunelveli

திருநெல்வேலி மாவட்டத்து புகழ்பெற்ற பெருமக்கள்

அகத்தியர் மற்றொகத்து நப்பசலையார், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சொல்லதிகாரத்துக்கு உரை எழுதிய சேனாவரையர், நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற வைணவ பெருமக்கள். குமரகுருபரர், குற்றால குறவஞ்சியை இயற்றிய திரிகூட ராசப்பக் கவிராயர். திருநெல்வேலி வரலாறு எழுதிய கால்டுவெல். நெல்லை நகரில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்: கவிராஜ நெல்லையப்ப பிள்ளை, கவிராஜ ஈஸ்வர மூர்த்தியாபிள்ளை பலபட்டை அழகிய சொக்கநாதப் பிள்ளை, இரட்சண்ய யாத்திரிகம் எழுதிய கிருஷ்ணபிள்ளை, வடகன் குளம் சவரிராயலு பிள்ளை, காசு பிள்ளை, முன்னீர் பள்ளம் பூரணலிங்கம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, வையாபுரிபிள்ளை, வெள்ளக் கால் சுப்பிரமணிய முதலியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை, தேவநேயபாவாணர், ம.லெ.தங்கப்பா, புதுமைப்பித்தன், அ.மாதவையா, பி.ஸ்ரீ.; பாஸ்கர தொண்டைமான், மீ.பா. சோமசுந்தரம், சிதம்பர ரகுநாதன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

கலை வளர்த்தோர்

வாய்பாட்டு : ஜி.கிட்டப்பா, ரெங்கம்மா, வி.வி.சடகோபன், சுந்தர மூர்த்தி ஒதுவார், ஹரிகேச முத்தையாபாகவதர்.

நாதசுரம் : காருக்குறிச்சி அருணாசலம், ஐயாகுட்டிக் கம்பர், திருநெல்வேலி சின்ன சுப்பையா கம்பர்.

தொழிலதிபர்கள் : டி.வி.எஸ். அய்யங்கார், என்பில்டு சுந்தரம் ஐயர், ஸ்பென்ஸர் அனந்தராம கிருஷ்ணன் - அடிசன் & எடிசன் நிறுவனம். இந்தியா சிமெண்ட்ஸ் சங்கரலிங்கம் அய்யர். :cheers:

வரலாற்றாசிரியர் : கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. வெளியீட்டாளர் : வ. சுப்பையாபிள்ளை. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
See less See more
History Of Tamiraparani




தாமிரபரணி, இந்தியாவில் உள்ள சிறப்பான நதிகளில் இதுவும் ஒன்று. பொதிகை மலை உச்சியில் தொடங்கி வங்க கடலில் வாசம் செய்யும் இந்த நதியைப் பற்றி பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு.

தாமிரபரணி நதியைப் பற்றி கூறும் போது அதன் வெவ்வேறு பெயர்களைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். அதே நேரம் தாமிரபரணி என்னும் பெயர் எப்படி வந்து இருக்கும் எனவும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். வால்மீகி ராமாயணத்திலும், வியாசர் பாரதத்திலும் காளிதாசனின் இரகுவம்சத்திலும் தாமிரபரணி பற்றி "தாம்பிரபரணி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாமிரபருணி எனவும் இதை கூறி இருக்கிறார்கள். இந்த பெயர் எல்லாம் மருவி தான் இப்போது தாமிரபரணி என்று அழைக்கப்படுகிறது.

வாரகமிகிரர் என்பவர் 505-587-ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர். இவர் கூட தாமிரபரணி பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஆக பழம்பெரும் நதி தாமிரபரணி . தாமிரபரணி - தாமிரபரணி என்றால் தாமிரம்+பரணி . தாமிரம் என்றால் செம்பு. அதாவது தாமிரம் கலந்த பரணி நதி தாமிரபரணி நதியானது. தாமிரசத்து நோய் தீர்க்கும் அரிய மருந்து. இந்த ஆற்றின் கரையில் தாமிரசத்து நிறைந்து காணப்படுகிறது. ஆகவே தாமிரபரணியில் குளித்தால் நோய் தீர்ந்து அற்புதம் மலர்கிறது. தாமிரம் நிறைந்த ஆறு தாமிரபரணி என அழைக்கப்படுகிறது என நெல்லை மாவட்ட மக்கள் பெயர் வந்த காரணத்தை பேசுகிறார்கள்.

ஆனால் கலை களஞ்சியம் என்றும் நுhலின் 5-வது பகுதியில் தாமிரபரணி பெயர் வந்த கதையை வேறு மாதிரி கூறுகிறார் ஆசிரியர். இலங்கை தீவிற்கு "தாப்ரபன்னெ” என்றும் "தாம்பபன்னி” என்றும் பெயர்கள் இருந்திருக்கிறது. இலங்கை தீவிலிருந்து மலை தோட்டங்களில் வேலை செய்ய வேண்டி வந்து குடியேறிய மக்கள் நதிக்கு தீவு பெயரால் "தாம்ப பன்னி” என்று அழைத்தார்கள். அதுவே இப்பொழுது தாமிரபரணி என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து தோட்ட வேலைக்கு வந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வெள்ளையர் காலங்களில் தோட்ட வேலை செய்ய வெள்ளையத்துரைகளே இலங்கை சென்று தோட்ட வேலைகளுக்கு தேவையான ஆட்களை அழைத்து வந்தார்கள. இதற்கு கடந்த 1994 ஆம் ஆண்டு காரையாரில் வாழ்ந்த அன்னம்மாள் என்னும் 98 வயது பாட்டியின் குடும்பமே சாட்சி. இந்த அன்னம்மாள் பாட்டி மஞ்சள் காமாலை நோய்க்கு அந்த சமயத்தில் மருந்து கொடுத்து கொண்டிருந்தார். மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த பிரசித்தி பெற்ற அன்னம்மாள் பாட்டி தற்போது உயிரோடு இல்லை.

பொருநை- இந்த தாமிரபரணிக்கு பொருநை நதி என்றும் மற்றுமொரு பெயரும் உண்டு. இந்த பெயர் எப்படி வந்தது என்று ஆராய்ந்த போது, தமிழ் நுhல்களில் பிற்காலங்களில் இந்த ஆற்றை தண் பொருநை என்று அழைத்தது தெரியவருகிறது. அதே நேரம் சிலப்பதிகாரத்தில் காவிரியை தண்பொருநை என்று குறிப்பிடுகிறார்கள். இருந்தாலும் தன்பொருநை என்று அதிக நுhல்கள் தாமிரபரணியை தான் குறிப்பிடுகிறது. நம்மாழ்வார் தாமிரபரணியை பொருநல் என்று குறிப்பிடுகிறார். அதாவது பொருந்தம் என்னும் பெயரே பிற்காலங்களில் பொருநை என்று அழைக்கப்படுகிறது.

அதாவது பொருந்தம் என்றால் பொருந்துதல் என்னும் பொருள்படுகிறது. முதல் ராஜராஜனுடைய 28 ஆம் கல்வெட்டுகள் 1013 வருடம் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் காணுமிடமான சீவலப்பேரியை அடுத்த சிற்றாறு (சித்திரா நதி) கலக்கும் பகுதியில் தாமிரபரணி நதியை தன் பொருந்தம் என்று குறிப்பிட்டுள்ளனர். பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டை குறிப்பிடும் போது சேக்கிழார் தாமிரபரணி ஆற்றை மனதில் கொண்டு "தண் பொருந்தப் புனல் நாடு” என்று தான் குறிப்பிடுகிறார்.

ஆகவே தாமிரபரணி தமிழ் நூல்களில் பொருநை, பொருநல, தண் பொருநை, தண் பொருந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாமிரபரணி செங்குத்தான பொதிகை மலையில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இதை பாணதீர்த்தம் என்று அழைக்கிறோம்
See less See more
History Of Tamiraparani



பாணதீர்த்தத்தில் கீழே உள்ள பாபநாசம் மேலணையில் சேரும் ஆறுகள் பாம்பாறு, காரியாறு என்னும் சிற்றாறுகள் ஆகும். பாணதீர்த்தத்திற்கு மேலேயே பேயாறு, உள்ளாறு என்னும் இரு சிற்றாறுகள் சேர்ந்து விடுகின்றன.

பொதிகை என்னும் அகத்திய மலையில் உருவாகும் தாமிரபரணி ஆறு சுமார் 75 மைல் தொலைவு ஓடி சுமார் 1750 சதுர மைல் பகுதிகள் செழிப்பாக்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடுத்தடுத்து பல குன்றுகளை கடந்து வரும் இந்த ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மிகவும் அற்புதமாக கருதப்படுகிறது. அதன்பின் முண்டன்துறைக்கு தாமிரபரணி முன்பே சேர்வலாறு அத்துடன் சேருகிறது.

அதன் பின் தாமிரபரணி இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி பாபநாசம் மலை குன்றுகளை கடந்து 300 அடி நீர்வீழ்ச்சியாக கல்யாணதீர்த்தம் என்ற பெயருடன் பாய்கிறது. மற்றொன்று லோயர்கேம்ப் அருகே வந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்பட்ட பிறகு அகத்தியர் அருவிக்கு பின்னால் மீண்டும் தாமிரபரணியில் சேருகிறது.

மணிமுத்தாறு அணை பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணை. பாபநாசம் அணைக்கு சமமான பலத்துடன் கட்டப்பட்டது. தாமிரபரணியின் துணை நதியான கடனாநதி, ராமநதி, கருப்பநதி, குண்டாறு, ஆகியவற்றில் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன.
See less See more
Tiger reserve sanctuary, Tirunelveli



பொதிகை மலையில் முண்டந்துறையில் தான் புலிகள் வாழ்ந்து வருகிறது. இந்த புலிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. இங்கு காணிகளும் புலிகளை கண்டு பயப்படுவது இல்லை.

இதுகுறித்து எனது நண்பர் தான் நேரில் கண்ட சம்பவத்தினை என்னிடம் பகர்ந்து கொண்டார். அந்த சம்பவம் இது தான். பாபநாசம் அணையின் தண்ணீர் திறக்கப்படும் காட்சி ஒருமுறை தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவர் எஸ்.கே.திருப்பதி. இவர் நாடக நடிகர். எனது நண்பரான இவர் காணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாடகம் ஒன்றை நடித்து காட்ட சென்றார். அவருடன் பெண்களும் சென்றனர்.

அதற்கு முன்பு காணிகளை பற்றி ஒரிரு வார்த்தை சொல்ல வேண்டும். காணிகள் வாழ்க்கை எப்போதுமே வித்தியாசமானது. இவர்களின் தொழில் வேட்டையாடுவது. இவர்கள் வேட்டையாட வில், அம்பு போன்ற கருவிகளை பயன்படுத்துவார்கள். ஏனெனில் துப்பாக்கி பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது. காணிகளுக்கு மந்திரம், தந்திரம் நன்றாக தெரியும். பெரும்பாலும் வேட்டைக்கு இரவு நேரம் தான் செல்வார்கள். இவர்கள் வேட்டைக்கு சென்றால் 2 அல்லது 3 நாள் கழித்து தான் வீட்டுக்கு வருவார்கள்.

இதற்கிடையில் பகல் வேளையில் தேன் எடுக்க சென்று விடுவார்கள். இவர்கள் தங்கள் வேட்டை மூலம் கிடைக்கும் பொருளை பணம் ஆக்குவது இல்லை. குறிப்பாக காணிகள் இனத்தவர் பெண்களை மணமுடிக்க ஆண்கள் தான் பணம்கொடுத்து முடிப்பார்கள். பணத்துக்கு பதிலாக பண்டமாற்று மூலம் பொருள்களை வாங்கி கொள்வார்கள். இவர்கள் குடியிருந்து வரும் குடியிறுப்புக்குள்ளே சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமே நுழைய முடியும். எந்த காரணம் கொண்டும் ஆண்கள் நுழைய முடியாது.

ஆனால் இந்த நிலை தற்போது மாறி விட்டது. இவர்கள் வட்டிக்கு பணம் பெற ஆராம்பித்த போது வெளி ஆண்கள் காணிகள் குடியிருப்பிற்கு வந்து வட்டியை பிரிக்க ஆரம்பித்தனர். பொதிகை மலையின் கீழே, குடியிருக்கும் பெண்கள் கீழே விளையும் அரிசி, மிளகுவத்தல், சிறு கிழங்கு கொண்டு கொடுத்து விட்டு காணிகள் மலை தோட்டத்தில் விளையும் ஏலேல (கப்பக்) கிழங்கு வாங்கிக் கொண்டு வருவார்கள். ( ஏழு - இலை - கிழங்கு என்ற பெயர்தான் மருவி ஏலேல கிழங்கு என்று பெயராகி இருக்க வேண்டும். இந்த பயிரில் ஏழு இலை இருக்கும். மேலும் மலையாள வார்த்தை படி இக் கிழங்குக்கு கப்பக்கிழங்கு என்று பெயரும் உண்டு.

அதாவது கம்பில் இருந்து வரும் கிழங்கு இது என்பதால் கப்பக்கிழங்கு) இப்படி பண்டமாற்று முறையில் வாழ்ந்த இந்த காணி மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படவே. அவர்களுக்கு பணம் மூலம் பொருள்கள் தேவைப்பட்டது. பின்பு பணத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டதால் வட்டிக்கு பணம் வாங்கும் நிலை ஏற்பட்டது. மருதூர் அணை மேலக்கால்வாய் தோற்றம் மலைக்கு கீழ் வாழும் மற்றவர்கள் காணிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி வசூல் பிரிக்க ஆரம்பித்தனர். இதனால் அவர்களுக்கு மனக்கஷடம் ஏற்பட்டது.

பணம் என்றாலே பிரச்சனை வந்துவிடுமல்லவா? எனவே வட்டி பிரச்சனை பெரும் பிரச்சனையாகி விட்டது. வட்டியால் மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை பற்றி நாட்டார்குளம் எஸ்.கே. திருப்பதி வேலை பார்த்த தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல்படி இவரது தலைமையில் தெரு நாடகம் போட்டு அவர்களுடைய நிலையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் காணிகுடியிருப்பு சென்றனர். அன்று இரவு நாடகம் அரங்கேறியது.

நாடகத்தை பார்த்த காணிகுடியிருப்பை சேர்ந்த முதிய பெண் ஒருவர் திருப்பதி கன்னத்தில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். கந்து வட்டிக்காரர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் வேதனைப்படும் காணிகள் இனிமேல் வட்டிக்கு வாங்க மாட்டோம் என உறுதியும் அளித்தனர். நாடகக் குழு அந்த குடியிருப்பில் ராத்திரி தங்கியது. மறுநாள் காலை நாட்டார்குளம் எஸ்.கே. திருப்பதி பல் துலக்குவதற்கு வேண்டிய பேஸ்ட், டவல் எடுத்துக் கொண்டு அந்த குடிலின் பின்புறம் வந்தார். அங்கு புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. பயத்தில் அவருக்கு ஒன்றும் ஓடவில்லை. சத்தம் போடவும் பயம். அதே நேரம் யாரையும் அங்கு காணவில்லை.

புலியிடம் வசமாக மாட்டிக் கொண்டோம் எப்படி தப்பிக்க என நினைத்த திருப்பதி அடுத்த கட்டம் வீட்டுக்குள் நுழைய கதவைத் திறக்க முயற்சித்தார். ஆனால் கதவு அடைக்கப்பட்டு விட்டது. திருப்பதி வெளியே வந்தவுடன் பெண் ஊழியர் ஒருவர் டிரஸ் மாற்ற கதவை உட்புறம் தாழ்ப்பாள் போட்டு விட்டார். திருப்பதி அடுத்தகட்டம் என்ன செய்வது என்று நினைக்கும் போது. புலி... அவரை பார்த்து விட்டது. . அடுத்து பாய்ந்து விடும் நிலையில்... திருப்பதியின் நரம்பு நாடிகள் எல்லாம் துடிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்த கணம் உயிர் நின்று விடும் போல இருந்தது.

வேர்த்து விறுவிறுத்துப் போன திருப்பதி இன்று நம்மை புலி அடித்து கொன்றுவிடும் என நினைக்கும் போது எதிர்புறம் நேற்று இரவு முத்தம் இட்ட பாட்டி எந்த டென்சனும் இல்லாமல் புலியின் அருகே வந்தார். இதைப் பார்த்த திருப்பதிக்கு ஓரளவு பயம் குறைந்தது. ஆயினும் அவர் பாட்டியிடம்" புலி என்றால் உங்களுக்கு பயம் இல்லையா ?” என்று கேட்டார். அதற்கு பாட்டி, "ஆமாம் எங்களுக்கு புலியை கண்டால் பயம் கிடையாது. ஆனால் புலியை துன்புறுத்தினால் தான் அது நம்மை எதிராளியாக பார்க்கும். இல்லையென்றால் அது நம்மை ஒன்றும் செய்யாது ”என்று கூறினார்.

"குறிப்பாக மலைஅடிவார பகுதியில் பாம்பிராணி என்று அழைக்கப்படும் சாம்பிராணி இனம் விஷம் கொண்டது. ஆனால் அது வீட்டுக்குள் நுழைந்து விளையாடுகிறது. அதை யாரும் விரட்டுவது கிடையாது. அந்த சாம்பிராணி இனமும் நம்மை ஒன்றும் செய்வது இல்லை. அதே போல் எந்த மிருகத்தையும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது பிரச்சனை ஏற்படுத்தாது” என்று பாட்டி மேலும் கூறினார். நாட்டார்குளம் எஸ்.கே.திருப்பதி தப்பித்தோம், பிழைத்தோம் என ஊர் வந்து சேர்ந்தார்
See less See more
^^ History Of Robert Caldwell (from wiki)

Robert Caldwell was born at Clady, Northern Ireland, on 7 May 1814 to Scottish parents. Initially self-taught and religious, young Caldwell graduated from the University of Glasgow and was fascinated by the comparative study of languages. At 24, Caldwell arrived in Madras on 8 January 1838 as a Presbyterian missionary of the London Missionary Society and later joined the Society for the Propagation of the Gospel Mission (SPG). To further his missionary objectives, Caldwell realised that he had to be proficient in Tamil to proselytise the masses and he began a systematic study of the language. He was consecrated Bishop of Tirunelveli in 1877.[1] In 1844, Caldwell married Eliza Mault (1822–99); the couple was to have seven children together. She was the younger daughter of the veteran Travancore missionary, Reverend Charles Mault (1791–1858) of the London Missionary Society. For more than forty years, Eliza worked in Nagercoil and Tirunelveli proselytising the vulnerable, especially Tamil-speaking women.

His Research

While serving as Bishop of Tirunelveli (alongside Edward Sargent), Caldwell did much original research on the history of Tirunelveli. He studied palm leaf manuscripts and Sangam literature in his search, and made several excavations, finding the foundations of ancient buildings, sepulchral urns and coins with the fish emblem of the Pandyan Kingdom.[6] This work resulted in his book A Political and General History of the District of Tinnevely (1881), published by the Government of the Madras Presidency.
This book has been described as being on occasion "... pejorative, outrageous, and somewhat paternalistic. But on the whole his studies represent a pioneering effort to understand religions completely foreign to the British mind". It remains a respected work today.[7]
See less See more
Sankarankoil temple



சங்கரன்கோவில் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆடி தபசு திருவிழா தான்.இந்த ஆடி தபசு திருவிழா ஜூலை 12 ஆம் தேதி சங்கரன்கோவிலில் வெற்றிகரமாக துவங்கியது .திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோமதி அம்மனுக்கு, சுவாமி சங்கர நாராயணராகவும் பின்னர் சங்கர லிங்கராகவும் காட்சியளிக்கும் தபசுக் காட்சி வைபவம்.

இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் இந்த திருவிழா நடைபெறும். அம்பாள், சிவன் , விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாக கொண்டாடப்படுகிறது . இந்த விழா கோலாகலமாக 12 நாட்கள் நடக்கும். இந்த திருவிழா அம்பாளுக்கான பிரதானம் என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

Sankarankovil is home to the famous Sankara Narayanan temple. This temple is famous for "Adi Thabasu" festival. This festival will take place for 12 days. On the last day of this festival, God will appear both as Sankara narayanar & Sankara Lingar to the goddess Gomathi Amman
See less See more
Manimuthaaru Dam

மணிமுத்தாறு அணை, மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்த ஓர் அழகான அணை . எங்கு பார்த்தாலும் மலைகளும் , மரங்கள் என்று இயற்கை வளம் நிறைந்து காட்சி அளிக்கிறது . இது திருநெல்வேலியில் இருந்து 47 km தொலைவில் அமைந்துள்ளது. இதன மூலம் பல்வேறு விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இங்கிருந்து சிறிது தூரம் பயணம் செய்தால் மணிமுத்தாறு அருவிக்கு சென்றடையலாம். இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.

See less See more
1 - 20 of 579 Posts
Top